Midiyala Hot News

Blogger news

RELEASED: G.C.E.A/L 2013 Exam Timetable

Friday, May 31, 2013

RELEASED: August 5 il Nadaipera Ulla G.C.E.A/L 2013 Pareetchaikana TimeTable Veliyaki Ullathu.

Download Seayya: http://www.doenets.lk/exam/docs/al2013/NEW-Syllabus-2013.pdf

Sunday, May 19, 2013


இலங்கையின் 2ஆவது அதிவேக நெடுஞ்சாலை...

கொழும்பு – கட்டுநாயக்காவுக்கு இடையிலான அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் 80 சதவீதமளவில் பூர்த்தியடைந்துள்ள நிலையில், இவ்வருடம் ஓகஸ்ட் மாதத்தில் இந்த நெடுஞ்சாலை பொதுமக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த அதிவேக நெடுஞ்சாலை தொடர்பான தகவல்கள் பின்வரும் வரைகலையில் விபரிக்கப்பட்டுள்ளன.

Sunday, May 12, 2013

ஹலால் தொடர்பில் இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்.


(VI) ஹலால் சான்றிதழ் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, விரைவில் இறுதி அறிக்கையொன்றை அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் குழுவிற்கு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
 .
அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக உறுப்பினர்கள் இது குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக குழுவின் உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அறிக்கையின் உள்ளடக்கங்கள் பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 .
இறுதியாக கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


உகண்டாவுக்கு ஜனாதிபதி விஜயம்


நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு உகண்டாவுக்கு பயணமாகியுள்ளார்.

இந்த விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.


மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக 150 தொழிற்சங்கள் மற்றும் 50 பொது அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை ஏற்பாடு செய்துள்ளன.

இது எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு, கெம்பல்பிட்டி மைதானத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


பால் மாவின் விலை அதிகரிப்பு?

400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் மாவின் விலை அதிகரிப்பு?

400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையும் டொலரின் பெறுமதிக்கேற்ப ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு பால்மாவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு பால்மாவை ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிரதான நாடுகள், ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலையை 5000 டொலர்களால் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பால் மா இறக்குமதிக்காக அறவிடப்படும் இறக்குமதி வரியையும் குறைக்குமாறு பால் மா உற்பத்தி நிறுவனங்கள், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாப்பரசரருக்கு பணிவிடை செய்த ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய ஆச்சர்யம் மிக்க தகவல்கள்.

Sunday, May 5, 2013


16வது பாப்பரசர், ஆசிர்வதிப்பர் எனும் போப்-பெனடிக் இஸ்லாத்தைத் தழுவினாரா? அல்லது இது ஓர் பொய்யான செய்தியா என்பதில் இன்று உலகம் தடுமாறிக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைத் துறந்த போப் பெனடிக் அவர்களின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
பாப்பரசரருக்கு பணிவிடை செய்பவர்களுள் ஒருவர் ஆச்சர்யம் மிக்க தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.
அவற்றுள், கடந்த ஞாயிறு தினத்தன்று போப் அவர்கள் முஸ்லிம்கள் வணங்குவதற்கு தகுதியான திசையாக எடுக்கும் மக்கா திசையை நோக்கி எழுந்து நின்று வணக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அது ‘அஸ்ர்’ எனப்படும் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளில் ஒன்றாக இருந்தது’ எனவும் கூறியிருந்தார்.
மேலும் 2006ல் இருந்து இஸ்லாமிய மறையான அல்குர்ஆனைப் படிப்பதில் போப் பெனடிக் அவர்கள் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறியிருந்தார்.
இச்செய்தியைக் கேட்டதும் மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. தங்களது ஒளி-ஒலிபரப்பு சாதனங்களை கீழேவைத்துவிட்டு, வத்திக்கான் வணக்கஸ்தலத்தின் ஊடகப் பிரிவில் போப் அவர்களைக் காண இருந்தவர்கள் வாயடைத்துப் போயினர். நம்ப முடியாமல் தங்களது அலுவலகங்களை நோக்கித் திரும்பினர்.
இதைவிட, ஆம்! போப் அவர்கள் சென் பீட்டர்ஸ் பஸிலிகா தேவாலயத்தின் பல்கனியில் 5 வேளையும் மக்காவை நோக்கி தொழுது வந்திருக்கின்றார் எனவும், அல் குர்ஆனை அவர் படித்து வந்தார் என்பதும் தற்பொழுது வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் போப் அவர்களின் அதி நம்பிக்கைக்குரியவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மேற்கத்தேய ஆங்கில ஊடகங்கள் இச் செய்தியை மிக இரகசியமாக பேணி கையாண்டு வருவதாகவும், இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
சில கிறிஸ்துவ ஆங்கில ஊடகங்கள் ‘பாப்பரசர் இஸ்லாத்தை தழுவியது எனும் செய்து வெறும் கட்டுக் கதையே’ என்பதாக ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன.
எப்படி இருந்த பொதிலும் ‘ முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களின் போது முஹம்மது நபி அவர்களை மேற்கோள் காட்டி அமைதிப்படுத்தி வந்ததும், கடவுள் ஒருவர் இருந்தால் நிச்சயமாக அவர் ஒருவரே என்றும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது’ எனவும் ஊடகத்திற்கு பகிரங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்ததும் உலகறிந்த விடயமே!

அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.


இந்நிலையில் தற்.ேபாது குற்றப்புல்னாய்வுப்பிரிவினரின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அசாத் சாலி எதிர்வரும் 3 மாதங்களுக்கு குற்றப்புலனாய்வுப்பிரிவினரின் கட்டுப்பாட்டில் விசாரணை செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்

புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'லயன் எயார்' விமானத்தின் பாகங்கள் ஆழ்கடலிலிருந்து மீட்பு

Saturday, May 4, 2013



-ரொமேஸ் மதுசங்க

14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டன.

வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர்.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டனர்.

 இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரே மேற்படி விமானத்தில் பாகங்கள் விழுந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு சென்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.

பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.

இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு, மேற்படி விமானத்தின் பாகங்களை கரையொதுக்குமாறு நீதிமன்ற கட்டளை பிறப்பித்தது.

இதற்கமைய மேற்படி கடற்பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட நிலையில், இன்றைய தினம் மேற்படி விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருட்கள் மீதான சுங்க வரியை பாகிஸ்தான் தளர்த்தியது




• தேங்காய் எண்ணெய் (Crude coconut oil) ஏற்றுமதி 100% தள்ளுபடி!
• இலங்கை - பாக்கிஸ்தான் வர்த்தகம் 174% உச்ச நிலை!
• 2012இல் மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 433,69 மில்லியன்
• 2013 இறுதிக்குள் 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு அமர்வுகள்
• செயலாளர் மட்ட கூட்டங்கள் இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக முடிவு


'இலங்கை, பாகிஸ்தான் இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் இவ்வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தொடரில் திருப்தியாக இருக்கும் அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ -  பாகிஸ்தான் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, இலங்கையின் சில ஏற்றுமதி பொருட்கள் மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது' என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அமைச்சர் பசிலை கௌரவித்து இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிக்கின்றேன். எமது இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கீழ் பல வாய்ப்புகள் இருக்கின்றதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனினும் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இந்த தருணத்தில் அதனையும் ஏற்படுத்த முயலவேண்டும் இதன் அடிப்படையாக இரு நாடுகளிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
 
விசேட உத்தியோகபூர்வ அழைப்பினை அடுத்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி, அண்மையில் கொழும்பு 03இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

'வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எமக்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனினும், நாம் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை. தற்போது இதனை பயன்படுத்திக்கொள்வது எமக்கு நல்ல தருணம்.
பலதரப்பட்ட எமது வர்த்தகம் மேலும் விரிவுபடுத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக 4 - 5 வரையிலுள்ள முக்கிய பொருட்கள் மீதான வரி தளர்வை மேலும் கவனத்திற்கொள்ள முடியும். உதாரணமாக பாகிஸ்தானில் பாரிய சீனி தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால் இலங்கை சீனியினை இங்கிருந்து இறக்குமதி செய்வதில்லை. அத்துடன், வர்த்தக சம்மேளனம் இருதரப்பு வர்த்தகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பல முதலீட்டு ஏற்பாடுகளை செய்கின்றது' என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி மேலும் தெரிவித்தார்.

'தற்போது இலங்கையில் 25 முதலீட்டு சபை திட்டங்களில் பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் முதலீடுதுள்ளனர். அவை ஆடைகள், இரசாயனங்கள், பெற்ரோலியம், ரப்பர், பிளாஸ்டிக், தோல் பொருட்கள் உற்பத்தி, உணவு, பானங்கள் மற்றும் புகையிலை என்பனவாகும். பாகிஸ்தானூடாக மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி வரி தொடர்பில் இலங்கை பல இடர்களை எதிர்நோக்குகின்றது. ஆனால் நாம் இலங்கைக்கு மூன்று முக்கிய பொருட்களான தேங்காய் எண்ணெய், வெற்றிலை மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான வரி தளர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்' என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் குரேஷி மேலும் தெரிவித்தார்.

வர்த்தக திணைக்களத்தின் புள்ளிவிபர அடிப்படையில் இலங்கை 5000 - 6000 (மெ.தொ) வெற்றிலையை பாகிஸ்தானுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்கின்றது. அதனை தொடர்ந்து இலங்கை தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷி ஆகிய நாடுகளுக்கு ஏக வழங்குநராக ஈடுபடுகின்றது.

பாகிஸ்தான் வெற்றிலைக்கான தனது இறக்குமதி தீர்வினை 35 வீதமாக குறைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 5.77 மில்லியன் வெகுமதியான வெற்றிலையினை பாகிஸ்தானுக்கு இலங்கை ஏற்றுமதி செய்தது. அத்துடன் தேங்காங் எண்ணெய் வரியினை 50 வீதமாகவும் குறைத்து, அது ஜூலை மாதத்திலிருந்து அமுலுக்கு வருவதற்கான ஏற்பாடுளையும் செய்துள்ளது.

சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் தயாரிப்புகளை வாங்குபவரகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10% சார்க் பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

2005ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அமுலாக்கியதிலிருந்து எமது இரு நாடுகளுக்கான வர்த்தக உறவு பாரிய அனுபவத்துடன் வளர்ச்சியுற்றது. 2005ஆம் ஆண்டு எமது மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 158 மில்லியனாக அதிகரித்ததுடன், 174 வீத வளர்ச்சியினை காட்டுகின்றது என அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.

வர்த்தக சமநிலை எப்போதும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. பாக்கிஸ்தானுக்கு இயற்கை ரப்பர், காய்கறி பொருட்கள், தேங்காய், பிரேசில் கொட்டைகள், தேயிலை, மரம், புண்ணாக்கு, புதிய வாயு டயர்கள் (ரப்பர்), தேங்காய் (கொப்பரை) எண்ணெய் ஆகியன இலங்கையின் முக்கிய ஏற்றுமதி ஆகின்றன.

2013ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடரில் அமைச்சர் ரிஷாத் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஆணையாளர் கலந்துகொள்ளவுள்ளனர்.

கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடர் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 29 - 30 வரை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது. இதற்கு முதல் 2011ஆம் ஆண்டு  இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக முடிவுற்றது. இவ் கூட்டத்தொடரில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பொருட்கள், சேவைகள், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் விமான சேவைகள், மற்றும் தொழில்நுட்ப உதவி வர்த்தகம் உள்ளிட்டவிடங்கள் கலந்துரையாடப்பட்டது.

பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கைக்கு 162 ஆவது இடம்



பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை 'ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம் பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது.

 பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்டவணையில் இந்தியாவுக்கு 140 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும்  பத்திரிகையாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. அட்டவணையில் இங்கிலாந்து 29 ஆவது இடத்திலும், அமெரிக்கா 32ஆவது இடத்திலும் இருக்கின்றன. ரஷ்யா 148 ஆவது இடத்தை பிடித்துள்ளது.  சீனா 173 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் உள்ளன.

அஸாத் சாலி கைதும் நன்றிகெட்ட முஸ்லிம் தலைமைத்துவங்களும். | importmirror.com

அஸாத் சாலி கைதும் நன்றிகெட்ட முஸ்லிம் தலைமைத்துவங்களும். | importmirror.com

ந்த வார ஜும்மாஹ் (04/05/2013) தினம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் சஞ்சலமும் ,கவலையும் ஒருவகையான எதிர்பார்ப்பும் கலந்த நிலையிலேயே எதிர் கொள்ளப்பட்டது. 
கடந்த சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கின்ற நெருக்குதல்கள் எமது பூர்வீகத்தை கொச்சை படுத்தியதுடன் நாளைய எமது இருப்பையும் கேள்விக்குறியாகியுள்ளது .

நாம் எதிர்கொண்ட சவால்களை எதிர்கொள்ள ஒரு அமைச்சர் படையே ஒருபக்கத்திலும் , “நாம் தான் இந் நாட்டு முஸ்லிம்களை வழிநடாத்த தகுதியுள்ள ஏகபிரதிநிதிகள்” என்று சொல்லக்கூடிய செல்வாக்கு மிக்க உலமா சபையை மறுபுறத்திலும் பெற்றிருந்தாலும் இன்று எமது அடைவுகள் தலைகீழாக ஆக்கப்பட்டுள்ளது.

 முஸ்லிம்களின் ஹலால் உண்ணும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது அல்லது கேள்விகுரியாகப்ப்ட்டுள்ளது

 திட்டமிட்ட விஷமப் பிரசாரங்கள் மூலம் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன,

 பகிரங்கமாக சிங்கள பொதுமக்களை உசுப்பேத்திவிட்டு முஸ்லிம் வியாபார ஸ்தளமான பெஷன் பக் நிறுவனம் தாக்கபட்டு அதன் சொத்துக்கள் பல அழிக்கபட்டன .

 முஸ்லிம்கள் பள்ளிவாயில்களினூடாக தீவிரவாதத்தை பரப்புகிறார்கள் , அக்குரனையிலுள்ள 83 பள்ளிவாயில்கள் ஜிஹாதிய பங்கர்கள் என்று பகிரங்கமாக பொய் கூறி பள்ளிகளை இடிக்கவும் வன்செயல்களை ஏற்படுத்தவும் திட்டமிடுகிறார்கள் .

இந்த வன்முறைகள்ளுக்கு எதிராக நீதியை பெற்று தர முடியாவிட்டாலும் ஆகக் குறைந்தது ஒரு பத்திரிகை அறிக்கையை ஏனும் வெளியிட முடியாதளவு கையாலாகாத ஊனச் சமூகத் தலைமைகளை கொண்டதொரு சமுதாயமாகவே இருந்துவருகின்றோம்.

மேற்சொன்ன பல் பக்க தாக்குதல்களை இந் நாட்டு முஸ்லிம்கள் மீது தொடுக்க பட்டிருக்கும் இவ்வேளையில் , இவ் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பி, எமது பிரச்சினகளை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கிய, “அசாத் சாலி திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற மன வேதனையுடன் , இருந்தவர்களுக்கு , ஏதோ ஒருவகையில் தீர்வுகளை எட்டக்கூடிய அறிவித்தல், ஆலோசனைகள் இன்றைய ஜும்மாவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்தவார ஜூம்மாவிற்கு முஸ்லிமகள் பள்ளிவாயில்களில் கூடினார்கள் .

ஆனால் அநேகமான பள்ளிவாயில்களில் (குறிப்பாக பதுளை ஜும்மா பள்ளிவாயிலில்) எமது எதிர்பார்ப்புகள் வழமைபோல் வெறும் எதிபார்புகளாகவே ஆக்கப்பட்டது . அதைவிட ஆகக் குறைந்தது “இப்படி ஒரு அநீதமான கைது நடந்துள்ளது அதற்காக குறைந்தது அவருக்காக அல்லாஹ்விடம் கையேந்தி ஒரு துவாவையேனும் கேளுங்கள்” என்ற ஒரு வார்த்தையை ஏனும் உதிர்க்காமல் மிகக் கவனமாக தமது வார்த்தைகளை கட்டுபடுத்தி கொண்டார்கள் .

இந் நாட்டில் ஹலால் பிரச்சினையின் மூலமே முஸ்லிம்களை குறிவைத்தார்கள் . இப்பிரச்சினையை அடிப்படையாக வைத்தே ஏனைய பிரச்சினைகளை தொடராக தொடுத்தார்கள் . ஆனால் ஹலால் பிரச்சினை எம்மால் உருவாகாக்கப்பட்டதொரு பிரச்சினை என்பதே உண்மையாகும்.


இதை தொடங்கி வைத்தவர்களே “ தற்போது குனூத் ஒதுவதட்கான தேவை உணரப்படாததால் இதன் பிறகு ஓத தேவையில்லை” என்ற அறிக்கையோடு ஹலால் பிரச்சினையை முடித்தும் வைத்தார்கள் . குறிப்பிட்ட இவ்வறிக்கையால் முஸ்லிம் பொதுமக்கள் கூட “இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு இதன்பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்ற மனோபாவத்திற் குள்ளானார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ள பொது பல சேனா ஹலால் பிரச்சினை முதல் ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் மீண்டும் மீண்டும் புதுபித் துகொண்டே செல்கிறார்கள். அவர்கள் கூறிய

 முஸ்லிம் பள்ளி வாயில்கள் ஜிஹாதிய பங்கர்கள் ,

 ஜம்மியத்துல் உலமா அல் கைதவுக்கு நிதியுதவியளிகின்றது,

 முஸ்லிமல்லாதவர்களுக்கு உணவளிக்கும் போது மூன்று முறை உமிழ்ந்து விட்டுதான் உணவளிக்கவேண்டும் என்று அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது .

 பெஷன் பக் போன்ற முஸ்லிம் வியாபாரஸ்தலங்கள் சிங்கள யுவதிகளை மதமாற்றம் செயப்படும் நிலையங்களாகவும் , காம செயல்களில் சிங்களப் பெண்களை ஈடுபடவைக்கும் அந்தபுரங்களாகவும் செயற்படுகின்றன .

போன்ற விஷக்கருதுகளை இதுவரை வாபஸ் பெறவோ, மறுக்கவோ இல்லை. ஆகவே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள எதிகால ஆபத்து எந்தளவிலும் இதுவரை குறையவில்லை . இந் நிலைமைகளை மாற்றியமைத்து பெரும்பான்மை சமூகத்துடன் இணக்கமான ஒருசூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய சாணக்கியமான தொரு தலைமைத்துவம் இதுவரை இல்லாதிருக்கும் நிலையில் , இவ்விடை வெளியை நிரப்பும்வகையில் இச்சமூக கொடுமைகளை எதிர்த்து அநியாயக்காரர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து சகஜ நிலையை ஏற்படுத்த ஓங்கி ஒலித்த குரலான அசாத் சாலிஹின் குரல் இன்று நசுக்கப்பட்டுள்ளது .

ஆகவே இவரின் இந்த அநீதியான கைது விடயமாக, இந் நாட்டு முஸ்லிம் அமைச்சர் படையில் அங்கம் வகிப்பவர்களும், அ ,இ ,ஜ ,உலமவோ உடனடியாக தமது நிலைபாட்டை விளக்கி அறிக்கைகள் விடவேண்டும்.

அவரவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் தமது கருத்துக்கள் அமைந்தாலும் சரி தமது நிலைபாட்டை வெளிபடுத்தவேண்டும். அரசின் கைகூலிகளாக இருந்துகொண்டு தலைகீழான அறிக்கைகளை வெளியிடும் விமல் வீர வன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முசம்மில் போன்ற கோடரிகாம்புகள் போன்றவர்கள் வெளியிடும் கருத்தை கொண்டவர்களாயினும் சரி, இது விடயத்தில் நீதிக்காக குரல் கொடுக்காவிட்டாலும் தத்தமது நிலைபாடுகளையேனும் அவர்கள் வெளியிடவேண்டும்,

அதை விடுத்து அம்நேஸ்டி இன்டர்நசனல் , சர்வதேச மனிதஉரிமை சபை, மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் அறிகைகளை எதிர்பார்த்திருப்பது நயவஞ்சக தனமான பதுங்கலாகும்.

அதே வேளை பள்ளிவாயில்களை பல வர்ணங்களில் நிறம் பூசுவதும், கலர் கலரான காபட் விரிப்புகளை விரிபதையும், பள்ளி வாயில்களில் தேநீருபசாரங்கள் வழங்குவதையும் மட்டுமே மக்கள் தொண்டாக மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் பண்ணுவதை விடுத்து , இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய சவால்கள் பற்றிய தெளிவுகளையும் அவ்வப்போது மக்களுக்கு தெளிவூட்டுவதும், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் சமூகதலைமைகளுக்காக பாரபட்சமின்றி ஒத்துழைப்பு வழங்குவதும் காலத்தின் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்
- See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_2816.html#sthash.PlhBVH9t.dpuf
ந்த வார ஜும்மாஹ் (04/05/2013) தினம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் சஞ்சலமும் ,கவலையும் ஒருவகையான எதிர்பார்ப்பும் கலந்த நிலையிலேயே எதிர் கொள்ளப்பட்டது. 
கடந்த சுமார் ஏழு மாதங்களுக்கு மேலாக இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக முடுக்கி விடப்பட்டிருக்கின்ற நெருக்குதல்கள் எமது பூர்வீகத்தை கொச்சை படுத்தியதுடன் நாளைய எமது இருப்பையும் கேள்விக்குறியாகியுள்ளது .

நாம் எதிர்கொண்ட சவால்களை எதிர்கொள்ள ஒரு அமைச்சர் படையே ஒருபக்கத்திலும் , “நாம் தான் இந் நாட்டு முஸ்லிம்களை வழிநடாத்த தகுதியுள்ள ஏகபிரதிநிதிகள்” என்று சொல்லக்கூடிய செல்வாக்கு மிக்க உலமா சபையை மறுபுறத்திலும் பெற்றிருந்தாலும் இன்று எமது அடைவுகள் தலைகீழாக ஆக்கப்பட்டுள்ளது.

 முஸ்லிம்களின் ஹலால் உண்ணும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது அல்லது கேள்விகுரியாகப்ப்ட்டுள்ளது

 திட்டமிட்ட விஷமப் பிரசாரங்கள் மூலம் பள்ளிவாயில்கள் தாக்கப்பட்டன,

 பகிரங்கமாக சிங்கள பொதுமக்களை உசுப்பேத்திவிட்டு முஸ்லிம் வியாபார ஸ்தளமான பெஷன் பக் நிறுவனம் தாக்கபட்டு அதன் சொத்துக்கள் பல அழிக்கபட்டன .

 முஸ்லிம்கள் பள்ளிவாயில்களினூடாக தீவிரவாதத்தை பரப்புகிறார்கள் , அக்குரனையிலுள்ள 83 பள்ளிவாயில்கள் ஜிஹாதிய பங்கர்கள் என்று பகிரங்கமாக பொய் கூறி பள்ளிகளை இடிக்கவும் வன்செயல்களை ஏற்படுத்தவும் திட்டமிடுகிறார்கள் .

இந்த வன்முறைகள்ளுக்கு எதிராக நீதியை பெற்று தர முடியாவிட்டாலும் ஆகக் குறைந்தது ஒரு பத்திரிகை அறிக்கையை ஏனும் வெளியிட முடியாதளவு கையாலாகாத ஊனச் சமூகத் தலைமைகளை கொண்டதொரு சமுதாயமாகவே இருந்துவருகின்றோம்.

மேற்சொன்ன பல் பக்க தாக்குதல்களை இந் நாட்டு முஸ்லிம்கள் மீது தொடுக்க பட்டிருக்கும் இவ்வேளையில் , இவ் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பி, எமது பிரச்சினகளை சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக்கிய, “அசாத் சாலி திட்டமிட்டு கைது செய்யப்பட்டுள்ளார்” என்ற மன வேதனையுடன் , இருந்தவர்களுக்கு , ஏதோ ஒருவகையில் தீர்வுகளை எட்டக்கூடிய அறிவித்தல், ஆலோசனைகள் இன்றைய ஜும்மாவில் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடனேயே இந்தவார ஜூம்மாவிற்கு முஸ்லிமகள் பள்ளிவாயில்களில் கூடினார்கள் .

ஆனால் அநேகமான பள்ளிவாயில்களில் (குறிப்பாக பதுளை ஜும்மா பள்ளிவாயிலில்) எமது எதிர்பார்ப்புகள் வழமைபோல் வெறும் எதிபார்புகளாகவே ஆக்கப்பட்டது . அதைவிட ஆகக் குறைந்தது “இப்படி ஒரு அநீதமான கைது நடந்துள்ளது அதற்காக குறைந்தது அவருக்காக அல்லாஹ்விடம் கையேந்தி ஒரு துவாவையேனும் கேளுங்கள்” என்ற ஒரு வார்த்தையை ஏனும் உதிர்க்காமல் மிகக் கவனமாக தமது வார்த்தைகளை கட்டுபடுத்தி கொண்டார்கள் .

இந் நாட்டில் ஹலால் பிரச்சினையின் மூலமே முஸ்லிம்களை குறிவைத்தார்கள் . இப்பிரச்சினையை அடிப்படையாக வைத்தே ஏனைய பிரச்சினைகளை தொடராக தொடுத்தார்கள் . ஆனால் ஹலால் பிரச்சினை எம்மால் உருவாகாக்கப்பட்டதொரு பிரச்சினை என்பதே உண்மையாகும்.


இதை தொடங்கி வைத்தவர்களே “ தற்போது குனூத் ஒதுவதட்கான தேவை உணரப்படாததால் இதன் பிறகு ஓத தேவையில்லை” என்ற அறிக்கையோடு ஹலால் பிரச்சினையை முடித்தும் வைத்தார்கள் . குறிப்பிட்ட இவ்வறிக்கையால் முஸ்லிம் பொதுமக்கள் கூட “இந் நாட்டில் முஸ்லிம்களுக்கு இதன்பிறகு எந்தப் பிரச்சினையும் இல்லை” என்ற மனோபாவத்திற் குள்ளானார்கள்.

ஆனால் முஸ்லிம்களுக்கு எதிராக போர் தொடுத்துள்ள பொது பல சேனா ஹலால் பிரச்சினை முதல் ஏனைய அனைத்து பிரச்சினைகளையும் மீண்டும் மீண்டும் புதுபித் துகொண்டே செல்கிறார்கள். அவர்கள் கூறிய

 முஸ்லிம் பள்ளி வாயில்கள் ஜிஹாதிய பங்கர்கள் ,

 ஜம்மியத்துல் உலமா அல் கைதவுக்கு நிதியுதவியளிகின்றது,

 முஸ்லிமல்லாதவர்களுக்கு உணவளிக்கும் போது மூன்று முறை உமிழ்ந்து விட்டுதான் உணவளிக்கவேண்டும் என்று அல் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது .

 பெஷன் பக் போன்ற முஸ்லிம் வியாபாரஸ்தலங்கள் சிங்கள யுவதிகளை மதமாற்றம் செயப்படும் நிலையங்களாகவும் , காம செயல்களில் சிங்களப் பெண்களை ஈடுபடவைக்கும் அந்தபுரங்களாகவும் செயற்படுகின்றன .

போன்ற விஷக்கருதுகளை இதுவரை வாபஸ் பெறவோ, மறுக்கவோ இல்லை. ஆகவே முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள எதிகால ஆபத்து எந்தளவிலும் இதுவரை குறையவில்லை . இந் நிலைமைகளை மாற்றியமைத்து பெரும்பான்மை சமூகத்துடன் இணக்கமான ஒருசூழ்நிலையை ஏற்படுத்தக்கூடிய சாணக்கியமான தொரு தலைமைத்துவம் இதுவரை இல்லாதிருக்கும் நிலையில் , இவ்விடை வெளியை நிரப்பும்வகையில் இச்சமூக கொடுமைகளை எதிர்த்து அநியாயக்காரர்களை சட்டத்திற்கு முன் கொண்டுவந்து சகஜ நிலையை ஏற்படுத்த ஓங்கி ஒலித்த குரலான அசாத் சாலிஹின் குரல் இன்று நசுக்கப்பட்டுள்ளது .

ஆகவே இவரின் இந்த அநீதியான கைது விடயமாக, இந் நாட்டு முஸ்லிம் அமைச்சர் படையில் அங்கம் வகிப்பவர்களும், அ ,இ ,ஜ ,உலமவோ உடனடியாக தமது நிலைபாட்டை விளக்கி அறிக்கைகள் விடவேண்டும்.

அவரவரின் அரசியல் நிகழ்ச்சி நிரல்களின் தமது கருத்துக்கள் அமைந்தாலும் சரி தமது நிலைபாட்டை வெளிபடுத்தவேண்டும். அரசின் கைகூலிகளாக இருந்துகொண்டு தலைகீழான அறிக்கைகளை வெளியிடும் விமல் வீர வன்சவின் தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் முசம்மில் போன்ற கோடரிகாம்புகள் போன்றவர்கள் வெளியிடும் கருத்தை கொண்டவர்களாயினும் சரி, இது விடயத்தில் நீதிக்காக குரல் கொடுக்காவிட்டாலும் தத்தமது நிலைபாடுகளையேனும் அவர்கள் வெளியிடவேண்டும்,

அதை விடுத்து அம்நேஸ்டி இன்டர்நசனல் , சர்வதேச மனிதஉரிமை சபை, மற்றும் வெளிநாட்டு தூதுவர்களின் அறிகைகளை எதிர்பார்த்திருப்பது நயவஞ்சக தனமான பதுங்கலாகும்.

அதே வேளை பள்ளிவாயில்களை பல வர்ணங்களில் நிறம் பூசுவதும், கலர் கலரான காபட் விரிப்புகளை விரிபதையும், பள்ளி வாயில்களில் தேநீருபசாரங்கள் வழங்குவதையும் மட்டுமே மக்கள் தொண்டாக மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் பண்ணுவதை விடுத்து , இன்று தேசிய ரீதியில் முஸ்லிம்கள் முகம் கொடுத்திருக்கும் பாரிய சவால்கள் பற்றிய தெளிவுகளையும் அவ்வப்போது மக்களுக்கு தெளிவூட்டுவதும், சமூகத்துக்காக குரல்கொடுக்கும் சமூகதலைமைகளுக்காக பாரபட்சமின்றி ஒத்துழைப்பு வழங்குவதும் காலத்தின் தேவை என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்
- See more at: http://www.importmirror.com/2013/05/blog-post_2816.html#sthash.PlhBVH9t.dpuf

ஜம்மியத்துல் உலமா, ஆஸாத் சாலி கைது தொடர்பில் ஜனாதி...

ஜம்மியத்துல் உலமா, ஆஸாத் சாலி கைது தொடர்பில் ஜனாதி...: அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆஸாத் சாலி கைது தொடர்பில் இன்று 04-05-2013 கடிதம் ஒன்றை அனுப்பிவைத்து...
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.

Blog Archive