Midiyala Hot News

Blogger news

பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கைக்கு 162 ஆவது இடம்

Saturday, May 4, 2013



பத்திரிக்கை சுதந்திர தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 3 ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பத்திரிகை சுதந்திர அட்டவணை ஒன்றை 'ரிபோர்டர்ஸ் வித்அவுட் பார்டர்ஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்பிரகாரம் பத்திரிகை சுதந்திரத்தில் இலங்கை 162 ஆவது இடத்தில் இருக்கின்றது.

 பத்திரிக்கை சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதத்தில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான அட்டவணையில் இந்தியாவுக்கு 140 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் கடந்த 2012ஆம் ஆண்டு மட்டும்  பத்திரிகையாளர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த அட்டவணையில், பின்லாந்து முதல் இடத்தை பெற்றுள்ளது. அட்டவணையில் இங்கிலாந்து 29 ஆவது இடத்திலும், அமெரிக்கா 32ஆவது இடத்திலும் இருக்கின்றன. ரஷ்யா 148 ஆவது இடத்தை பிடித்துள்ளது.  சீனா 173 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 159 ஆவது இடத்திலும் உள்ளன.

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.

Blog Archive