Midiyala Hot News

Blogger news

கணினி மெதுவாக இயங்க காரணம் என்ன?

Wednesday, September 25, 2013


புதியதில் வேகமாக இயங்கிய நம் கணினி சில மாதங்களில் மிக மெதுவாக இயங்க ஆரம்பித்து விடும். இதற்கு நாம் சரியாக பரமரிக்காதது தான் மிக முக்கியமான காரணம். இப்படி ஆகாமல் இருக்க அடிக்கடி நீங்கள் உங்கள்  கணினியை சரியாக பராமரித்தல் அவசியம். இந்தப் பதிவில் எப்படி இது ஏற்படுகிறது, எப்படி சரி செய்வது போன்ற முறைகளை காண்போம்.


காரணங்கள்: 
  1. மிகக் குறைந்த Hard Disk Space
  2. நிறைய Program-கள் இயங்கிக் கொண்டு இருப்பது.
  3. Data Corruption
  4. அதிக சூடாகுதல்
  5. Operation System ஆனது Corrupt ஆகி இருத்தல்.
  6. Hardware Problems
  7. Driver பிரச்சினை
இந்த ஏழும் மிக முக்கியமான காரணங்கள், இனி தீர்வுகளை காணலாம்.
Reboot :
உங்கள் கணினியை Restart அல்லது ஒரு முறை Shutdown செய்து ON செய்வது மூலம் இதை தவிர்க்கலாம்.
Hard Disk Space
இது மிக மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். நீங்கள் எந்த Drive-இல் Operating System இன்ஸ்டால் செய்து உள்ளீர்களோ, அதன் மொத்த அளவில், 25 சதவீதம் காலி இடம் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுதல் அவசியம்.
மற்ற Drive-களில் குறைந்த பட்சம் 500MB – 1GB காலியாக இருத்தல் நலம்.
Hard drive corrupted or fragmented
இந்த இரண்டையும் நீங்கள் மெதுவாக இயங்கும் போதெல்லாம் கவனிக்க வேண்டும்.
Run ScanDisk - இது Hard Disk – இல் ஏதேனும் பிரச்சினை உள்ளதா என்று சோதிக்க பயன்படுகிறது.
இதை செய்ய - My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>> Error Check 
இதில் Start என்பதை கிளிக் செய்யவும். Scan ஆரம்பித்து விடும்.
அந்த பகுதியில் வரும் “Automatically fix errors” என்பதை கிளிக் செய்தால், அடுத்த முறை கணினி On/Restart ஆகும் போது இந்த சோதனை நடைபெறும்.
Run Defrag - இதை செய்ய My Computer >> Right Click Any Drive (C:, D:, E:. etc…) Properties>> Tools>>  Defragment now என்பதை தெரிவு செய்து, வரும் பகுதியில் Drive தெரிவு செய்து,  Defragment என்பதை என்பதை கிளிக் செய்யவும். இந்த செயல் இப்போது தொடங்கி விடும்.
தேவை இன்றி இயங்கும் Programs
சில நேரங்களில் நம் கணினியில் சில ப்ரோக்ராம்கள் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கும், இவை நம் கணினியின் வேகத்தை குறைக்கும். CTRL+ALT+DELETE அழுத்தி “Task Manager” பகுதிக்கு வரவும். இதில் “Applications” Tab -இல் தேவை இல்லாத ப்ரோக்ராம் மீது ரைட் கிளிக் செய்து “Go To Process” கொடுத்தால் “Process” பகுதியில் அந்த மென்பொருளின் இயக்கம் தெரிவு செய்யப்பட்டு இருக்கும். இங்கே மீண்டும் ரைட் கிளிக் செய்து “End Process” தந்து விடும். 
Virus பிரச்சினைகள் 
இது எல்லோருக்கும் தெரிந்த பிரச்சினை. நல்ல Antivirus மென்பொருள் மட்டுமே இதற்கு தீர்வு.
Device பிரச்சினைகள்
உங்கள் கணினியில் உள்ள Device கள் கூட உங்கள் கணினியை மெதுவாக இயங்க  வைக்கும். இவற்றை செக் செய்ய. Right Click On My computer>> Manage என்பதை கிளிக் செய்து அதில்  “Device Manager” பகுதிக்கு செல்லவும்.
இங்கே உள்ள Device-களில் கீழே காண்பது போல வந்தால் அவற்றில் பிரச்சினை என்று அர்த்தம்
 
இவற்றில் முதலாவது போல மஞ்சள் நிறத்தில் வந்தால் அதன் மீது ரைட் கிளிக் செய்து Remove செய்து விட்டு கணினியை Restart செய்யவும். இப்போது மீண்டும் Detect ஆகும்.
இரண்டாவது போல பெருக்கல் குறி வந்தால் Disable ஆகி இருக்கலாம், அப்படி என்றால் ரைட் கிளிக் செய்து enable தரவும். இது enable ஆகியும் பிரச்சினை என்றால் Remove செய்து விட்டு Restart செய்யவும்.
மறுபடியும் பிரச்சினை குறிபிட்ட Device க்கு நீங்கள் Latest Driver ஐ தரவிறக்க வேண்டும்.
கம்ப்யூட்டர்/Processor சூடாகுதல் 
மிக அதிக நேரம் இயங்கினால் இந்த பிரச்சினை வரும். அத்தோடு உங்கள் கணினியின் CPU பகுதியில் சேர்ந்து இருக்கும் குப்பைகள் இந்த பிரச்சினையை உருவாக்கும். எனவே CPU-வை கழட்டு சுத்தப்படுத்த வேண்டும். இந்த நேரத்தில் மிக கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். எந்த Wire, அல்லது Device-க்கும் எந்த பிரச்சினையும் வரமால் பார்த்துக் கொள்ள வேண்டும்.
எனவே இதை கணினி பற்றி நன்கு அறிந்த ஒருவரை அருகில் வைத்து செய்தல் நலம்.
RAM Memory Increase செய்தல் 
உங்கள் கணினியில் RAM Memory பொறுத்து உங்கள் கணினி வேகம் மாறும். இப்போதைய நிலைமைக்கு 2GB RAM பயன்படுத்துதல் நலம்(கணினியை பொறுத்து மாறும், எனவே இது குறைந்த பட்ச அளவு). புதிய கணினி வாங்குவோர் இந்த விசயத்தில் எப்படி தெரிவு செய்வது என்பதை புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? என்ற பதிவில் படிக்கலாம்.
உங்கள் RAM Memory எவ்வளவு என்று அறிய Right Click On My Computer >> Properties என்பதில் General Tab-இல் பார்க்கவும்.
Operation System இன்ஸ்டால் செய்தல்
மேலே சொன்ன எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றால் புதிய Operating System இன்ஸ்டால் செய்து முயற்சிக்கவும்.
Hardware பிரச்சினைகள் 
மேலே கூறிய எல்லாம் செய்தும் பிரச்சினை என்றால் Hard Drive, RAM, Mother Board, CPU போன்றவற்றில் ஏதேனும் பிரச்சினை என்று அர்த்தம். இனி Service Center-ஐ நாடுதல் நலம்.
பழைய கணினி 
உங்கள் கணினி ஐந்து வருடத்துக்கும் அதிகமாக உழைத்து இருந்தால் அதை மாற்றி விட்டு புதிய கணினியை வாங்குதல் நலம்.

பிள்ளை இலங்கைக்கு உற்சாகத்தையும் கொடுத்து காலக்கெடுவையும் விதித்தார்!


2014 மார்ச் மாதமளவில் மனிதவுரிமை சம்பந்தமான பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் தீர்க்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் நவி பிள்ளை காலக்கெடு விதித்துள்ளார்.

அவ்வாறு செய்யத் தவறின், பன்னாட்டுச் சமூகம் தனது சொந்த விசாரணை முறையை நிறுவுவதற்கான கடப் பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித் தார்.

இன்று (செப் 25) நடைபெற்ற ஐ.நா.வின் 24வது கூட்டத்தொடரில் உரையாற்றிய அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபையின் பிரதி உயர் ஆணையர் ஃபிளாவியா பென்சியரினால் முன்வைக்கப்பட்ட இலங்கை தொடர்பான அறிக்கையின் மீது கருத்து தெரிவித்த நவிபிள்ளை, மனித உரிமைச் சபை அக்கறை செலுத்தும் குற்றச்சாட்டுகளை சுயமாகவோ அல்லது நம்பிக்கை யான முறையிலோ புலனாய்வு செய்வதற்கு யாதேனும் புதிய அல்லது அனைத்தும் உள்ளடங்கிய முயற்சியைத் தன்னால் காண முடியவில்லை என்று தெரிவித்தார்.

குற்றமிழைத்த தனிநபர்களை வெற்றிகரமாக நீதியின் முன் நிறுத்துவது உள்ளிட்ட தெளிவான பெறுபேறுகளுடான நம்பத் தகுந்த தேசிய செயன்முறையில் ஈடுபடுவதற்கு இப்போதிருந்து 2014 மார்ச் வரைக்குமான காலப் பகுதியை இலங்கை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள அவர் உற்சாகம் அளித்தார். இலங்கை அரசாங்கம் அவ்வாறு செய்யத் தவறினால், பன்னாட்டுச் சமூகம் தனது சொந்த விசாரணை முறையை நிறுவுவதற்கான கடப்பாட்டைக் கொண்டிருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்' என்று அந்த அறிக்கை கூறுகின்றது.

பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில் திடீர் தீவு!

பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (24) ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற் கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியு ள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர் திடீரென இத்தீவு அதிசயமாக தோன்றியுள்ளது. 

இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சித் திணைக்களத்தின் பொதுப்பணி ப்பாளர் ஆரிப் மஹ்மூத் கூறுகையில்,

'பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் அரேபியக் கடலில் ஒரு சிறிய தீவொன்று தோன்றியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார். 

சுமார் 9 மீற்றர் உயரமும் 100 மீற்றர் உயரமானதுமான இத்தீவினை பார்ப்பதற்கு அப்பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடுவதாக க்வதார் உயர் பொலிஸ் அதிகாரி உம்ரானி கூறியுள்ளார். 

நேற்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமிதிர்ச்சியானது 1200 கி.மீ தூரத்தினைக் கடந்து இந்தியாவின் டெல்லி வரையில் உணரப்பட்டது. இதில் இதுவரையில் 238 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ரணில் பதவி விலக தீர்மானித்து விட்டார்....!


ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்குத் தீர்மானித்துள்ளார் என அறியவருகின்றது.

நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியோடு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதுடன்,கட்சியின் தலைமைத்துவம் தொடர்பிலான பொறுப்பினை இளைஞர்களிடம் கையளிக்கவும் உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைகளுடன் நடாத்திய கலந்துரையாடலொன்றின் பின்னரேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், கருஜயசூரியவை மீண்டும் நிறைவேற்றுக் குழுவில் இணைத்துக் கொள்வதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

(கேஎப்)

புத்தளத்தில் மீட்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் (படங்கள் இணைப்பு)

Tuesday, September 24, 2013

வடமேல் மாகாண சபைக்கான தேர்தலில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன. புத்தளம் மாவட்டத்தில் வாக்களிக்கப்பட்ட வாக்குச்சீட்டுக்களே 24-09-2013 மீட்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து அங்கு விரைந்த புத்தளம் தெரிவத்தாட்சி அதிகாரி இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இந்தச் சம்பவம் குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து அங்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் அழைக்கப்பட்டு பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பதற்ற நிலை காணப்பட்டது.



சி.வி.விக்கினேஸ்வரன் எனக்கும் தூரத்துச் சொந்தம்” ஜனாதிபதி மகிந்த

Monday, September 23, 2013

இலங்கை வடக்கு மாகாணத்தில் தேர்தல் முடிந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அக் கூட்டணியின் பிரதான வேட்பாளர் சி.வி.விக்கினேஸ்வரன், வடக்கு மாகாணத்தின் முதல்வராக போகிறார். 
தமிழ் தேசியக் கூட்டமைப்பு இதுவரை மக்களுக்கு காட்டிய அரசியல்வாதிகளில் இருந்து விக்னேஸ்வரன் வித்தியாசமாக இருப்பது, கூட்டமைப்பு இதுவரை செய்துவந்த அரசியலில் இருந்து வேறுபட்டு இருக்கப்போகிறது. அதை இதுவரை காலமும் தமிழ் தேசிய அரசியலுக்கு பழக்கப்பட்டவர்களால் சகித்துக்கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. சகித்துக்கொள்வது நல்லது.
யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு ஜெயித்துள்ள விக்னேஸ்வரன், யாழ்ப்பாணத்தில் பிறந்தவரல்ல. கொழும்பு ஹல்ஸ்ட்ரோஃப்பில் பிறந்தவர். தனது வாழ்வின் முதல் 9 ஆண்டுகளையும், சிங்கள பகுதியான குருணாகலவில் வசித்தவர். அதன்பின், வசித்தது, மற்றொரு சிங்கள நகரமான அனுராதபுர. கல்வி கற்றது, கொழும்பு ராயல் கல்லூரி. தேர்தலுக்கு முன்புவரை கொழும்புவில் முழுமையான சிங்கள வி.ஐ.பி.களுடனும், அரசியல் தலைவர்களுடனும் மிங்கிள் பண்ணி வாழ்ந்தவர்.
2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகளை யுத்தத்தில் அழித்ததற்காக இலங்கை அரசு நடத்திய வெற்றி விழா கொண்டாட்டங்களில் அரசு வி.ஐ.பி.களுடன் கலந்து கொண்டவர், விக்கினேஸ்வரன்.
“புலிகளை அழித்ததை வெற்றி விழாவாக கொண்டாடுகிறார்களே” என தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் வெளிநாட்டு தமிழர்களின் மேடைகளில் கண்கள் சிவக்க முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில், விக்கினேஸ்வரன் அரசியலுக்கே வரவில்லை. அப்போது ‘கண் சிவந்த’ தமிழ் எம்.பி.க்கள் இப்போது விக்கினேஸ்வரனுக்கு ‘மண் சிவக்க’ சிவப்பு கம்பள வரவேற்பு கொடுப்பதில் பிசி.

விக்கினேஸ்வரனின் இரு மகன்களும் திருமணம் செய்திருப்பது, இரு சிங்கள பெண்களை. ஒரு மருமகள், இலங்கை அரசின் தற்போதைய அமைச்சர், வாசுதேவ நாணயக்காரவின் மகள். மற்றைய மருமகள், முன்னாள் எம்.பி. கேசரலால் குணசேகரவின் சகோதரர் மகள். இருவரும் பாரம்பரிய சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள்.
வடக்கு மாகாண தேர்தல் முடிவு பற்றி, இலங்கை ஜனாதிபதி மகிந்த  என்ன சொல்கிறார்?
“வடக்கில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது எனக்கு ஏற்கனவே தெரியும். வடக்கில் முதலமைச்சராக விக்னேஸ்வரன் வருவது பற்றி நான் மகிழ்ச்சியடைகிறேன். காரணம், என்னதான் தமிழராக இருந்தாலும் அவர், தென் பகுதியில் சிங்களர்களுடன் ஒன்றாக, ஒரே குடும்பமாக வாழ்ந்து வருபவர்.
வடக்கு மாகாணத்தை ஆட்சி செய்ய போகிற அவர், எனது அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் கேசரலால் குணசேகர ஆகியோரின் உறவினர். ஒரு விதத்தில், எனக்கும் அவர் தூரத்துச் சொந்தம்” என்கிறார், ஜனாதிபதி ராஜபக்ஷே

வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர


வடமேல் மாகாண முதலமைச்சர் ?தயாசிறி ஜயசேகர முன்னிலையில்


வடமேல் மாகாணசபையில் விருப்பு வாக்குகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தயாசிறி ஜயசேகர முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு கட்சி மாறிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தானே வடமேல் மாகாண சபையின் முதலமைச்சர் என சவால் விடுத்தார். இந்நிலையில் வடக்கைப் போலவே இம்முறை இடம்பெற்ற வடமேல் மாகாண சபை தேர்தலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 
ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு எங்கும் போக மாட்டேன் என கூறிக் கொண்டிருந்த தயாசிறியின் கட்சி தாவலும், அவரது சூளுரைகளும் அதற்கான காரணமாக அமைந்தன. 
இந்நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட தயாசிறி ஜயசேகர விருப்பு வாக்குகளின் படி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் மகனான ஜொஹான் பெர்ணான்டோவிற்கும் தயாசிறி ஜயசேகரவிற்கும் இடையில் போட்டிநிலை ஏற்பட்டது. 
இந்நிலையில் தயாசிறி ஜயசேகர முதன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

பிரச்சினை எங்கே இருக்கிறது.......?

Sunday, September 15, 2013


இம்முறை வடமேல்,மத்திய,வட மாகாண சபை தேர்தலில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று எல்லோரும் மேடை போட்டு பேசுகின்றனர்........ என்றாலும் எந்த ஒரு அரசியல் கட்சியின் மேடையிலும் நீங்கள் எல்லோரும் கட்டாயம் வாக்களிக்க செல்லுங்கள் என்று கூறவில்லை.

ஏன் ?

உதாரணமாக சென்ற வடமேல் மாகாண சபை குருணாகல் மாவட்டத்தில் அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகளை பார்த்தால்....

மொத்த முஸ்லிம் வாக்குகள் சுமார் 100000

ஐக்கிய தேசிய கட்சி + முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி வாக்குகள் 25000(பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 4 )ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வாக்குகள் 14500(பெறப்பட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் 1 )ஏனைய கட்சிகளுக்கு 500 அழிக்கப்பட்ட மொத்த முஸ்லிம் வாக்குகள் வெறும் 40000
ஏனைய 60000 முஸ்லிம் வாக்குகளிலும் வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் மரணித்தவர்கள் என்று 20000 வாக்குகளை வைத்து விட்டு பார்த்தால் எஞ்சியுள்ள 40000 (அவர்களும் வாக்களித்து இருந்தால் குருணாகல் மாவட்டத்தில் எமது முஸ்லிம் பிரதிநிதிகள் எண்ணிக்கை இன்னும் மூன்று அதிகரித்திருக்கும்) வாக்களர்களும் எங்கே போனார்கள் ?????

யார் வென்றாலும் எமக்கு பிரயோஜனம் இல்லை என வீடுகளில் ஒதுங்கிக் கொண்டார்களா ??

இல்லை அந்தந்த கட்சிக்காரர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று விலகிப்போனார்கலா ??

இல்லை அல்லாஹ் தருவான் என்று சுருங்கி போனார்களா ?

தீர்வை அரசியல் வாதிகள் தேடவுமில்லை.....

மக்கள் கவனிக்கவும் இல்லை.....

ஆனால்... பள்ளிகள் உடைக்கப்படுவது பற்றி அங்கலாய்க்கின்றோம்.
உரிமைகள் மிதிக்கப்படுகிறது என்று ஓலமிடுகின்றோம்.
முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்பதாக பகிரங்கமாக சொல்வதாக கர்ஜிக்கின்ன்றோம்.
இஸ்லாமிய சரிஆ காட்டு மிராண்டி தரமான சட்டம் என்று கூறுபவர்களை கடிந்து கொள்கின்றோம்.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கம் என்று சொன்னவர்களை சாபாம் இடுகின்றோம். 
பிரச்சினை எங்கு இருக்கிறது என்று யாரும் பார்ப்பதில்லை.

வாக்காளர்கள் வீட்டிலே தூங்கிவிட்டு எங்களுக்காக பேச யாரும் இல்லையே என்று அரசியல்வாதிகளை திட்டி தீர்ப்பதில் பிரயோஜனமில்லை.
இந்த நிலமை மாறவேண்டும்,எமது முஸ்லிம் வாக்குகளின் பெறுமதியை முழு நாட்டுக்கும் சர்வதேஷத்துக்கும் காட்டவேண்டும்...
இதற்கான ஒரே வழி நமது முஸ்லிம் வாக்குகள் அனைத்தும் இயக்க வேறுபாடுகள் மறந்து போடப்பாடல் வேண்டும்.
அது எந்த கட்சி இன் எந்த அபேட்சகருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம்.
ஆனால் அந்த அபேட்சகர் நிச்சயம் ஒரு முஸ்லிம் பிரதிநிதியாக இருக்க வேண்டும்,அதிலும் சமூகத்தின் குரலாக என்றும் ஒலிக்க வேண்டும்.
அதற்காக எங்கள் வாக்குகள் அனைத்தும் முழுமையாக பயன்படுத்தப்படல் வேண்டும்.
எனவே இது சம்பந்தமான அறிவுறுத்தல்கள் பள்ளிவாசல் ஊடாகவும்,மிம்பர் மேடைகள் ஊடாகவும் சமூகத்திற்கு வழங்கப்படல் வேண்டும்.இது ஒரு சமூகத்தின் கூட்டு பொறுப்பு.

எனவே வருகின்ற 21 ஆம் திகதி முஸ்லிம்கள் அனைவரும் எமது உரிமைக்காக எமது வாக்குகள் அனைத்தையும் வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று பயன்படுத்துவோம்.

அன்றைய தினம் எமது வேலைகளை சமூகத்தின் நன்மைக்காக சிறிது சுருக்கிக் கொள்வோம்.
எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன்.

(எந்த சமூகம் தங்களை தாங்களே மாற்றிக்கொள்ளவில்லையோ அந்த சமூகத்தை அல்லாஹ் மாற்ற மாட்டான்)

5 வயதில் தனியாக விமானம் ஓட்டி பரபரப்பை ஏற்படுத்திய சிறுவன்!

Thursday, September 5, 2013


சீன தலைநகர் பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது தொடர்ந்து 35 நிமிடங்கள் தனியாக விமானம் ஓட்டிய சிறுவன், அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினான்.
கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்சு மாகாணத்தை சேர்ந்தவர் ஹி லிஷெங். தன்னுடைய 5 வயது மகனை எதற்கும் அஞ்சாத சாகசக்காரனாக உருவாக்க வேண்டும் என்பதில் இவருக்கு தனியாத ஆர்வம்.
இந்த ஆர்வம் அவருக்குள் வெறியாக உருவெடுக்க தொடங்கியது. கடந்த பிப்ரவரி மாதம், நியூயார்க் நகரின் மைனஸ் 13 செல்சியஸ் உறைபனியில் தனது 5 வயது மகன் டுவோடுவோ-வை வெறும் ஜட்டியுடன் அமர வைத்ததன் மூலம் இவரும் இவரது மகனும் பிரபலமடைந்தனர்.
இந்நிலையில், இவருக்கு சொந்தமான சிறிய ரக விமானத்தில் டுவோடுவோ-வை மட்டும் தனியாக அமர்த்தி பீஜிங்கில் உள்ள உயிரியல் பூங்காவின் மீது அவன் விமானத்தை செலுத்தி வட்டமிட்டு பறக்கும் சாகசத்தை கண்டு ஹி லிஷெங் பரவசமடைந்துள்ளார்.
அந்த விமானம் தரையிறங்கியதும், இவ்வளவு நேரம் தங்களின் தலைக்கு மேலே வட்டமிட்ட விமானத்தை ஓட்டியவன் 5 வயது சிறுவன் என்பதை அறிந்த பொதுமக்கள் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர்.
விமானம் ஓட்டுவதற்கு, போதுமான பயிற்சியும், லைசென்சும் தேவை என்ற விதிமுறைகளை மீறி 5 வயது சிறுவனை விமானம் ஓட்ட வைத்த ஹி லிஷெங் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.

Sep 03 Madige Midiyalayil Nadaipetra Pothujana Munnaniyin Maaperum Koottam Mr.Namal Rajapakse MP Kalandu Sirappiththar.

Tuesday, September 3, 2013


Sep 03 Madige Midiyalayil Nadaipetra
Pothujana Munnaniyin Maaperum Koottam. Mr.Namal Rajapakse MP, Mr.Abdul Saththar Matrum Palar
Inda Koottaththil Kalandu Kondanar..








 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.

Blog Archive