Midiyala Hot News

Blogger news

Monday, November 25, 2013







ஜனாதிபதிக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தகவல் மற்றும்  தொடர்பாடல் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற 2013 உலக உச்சி விருதின் அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சகல பிராந்தியங்களுக்கும் பிரநிதித்துவம் வகிக்கும் உலக உச்சி விருதின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களால் இந்த விருதிற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பிராந்தியம் மற்றும் உலகில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புக்களுக்காகவே ஜனாதிபதி மஹிந்தவிற்கு இந்த விருத்து வழங்கப்பட்டுள்ளது.

அவரது தூரநோக்குள்ள தொழில்நுட்ப செயற்றிட்டங்கள், சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் அமுல்படுத்தப்படும் மக்கள் மைய செயற்பணிகள் என்பனவற்றுக்காவுமே இந்த விருது வழங்கப்பட்டது.

உலக உச்சி விருதானது தகவல் சமூகத்தைப் பற்றிய ஐக்கிய நாடுகளின் சபையின் உலகத்தரம் வாய்ந்த முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.

Sunday, November 24, 2013

අයවැයෙන් පෙට්‍රල්,ඩීසල් ගණන් උස්සයි

ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා විසින් පසුගිය 21වනදා පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළ අයවැය යෝජනාවලියට අනුව පෙට්‍රල් සහ ඩීසල් සඳහා වූ බදුද ඉහළ දමා තිබේ.
ඒ අනුව පෙට්‍රල් ලීටරයක් සඳහා රුපියල් 27ක බද්දක්ද ඩීසල් ලීටරයක් සදහා රුපියල් 03ක බද්දක්ද පනවා ඇත.

Saturday, November 23, 2013

Published on Sunday, 24 November 2013 12:28
Daya jony 410px 24-11-13වයඹ පළාත් සභාව තුල මහ ඇමති දයාසිරි ජයසේකර මහතා විසින් සිදු කරමින් සිටින සේවාව අගය කරන බව අමාත්‍ය ජොන්ස්ටන් ප‍්‍රනාන්දු පවසයි.
පසුගිය පළාත් සභා මැතිවරණයේදී දයාසිරි ජයසේකර සහ ජොන්ස්ටන් ප‍්‍රනාන්දු දෙපාර්ශ්වයන් අතර විශාල ලෙස ගැටුම් ඇවිල ගිය අතර ඉන් පසුව ඔවුන් දෙදෙනා ප‍්‍රසිද්ධ වේදිකාවක එක්ව සිටීමට දක්නට ලැබුනේ මෑතකදීය.
නිකවැරටිය ප‍්‍රදේශයේ පැවති උත්සව සභාවක් අමතමින් ජොන්ස්ටන් ප‍්‍රනාන්දු ඇමතිවරයා වැඩිදුරටත් කියා සිටියේ, ඊළඟ ජනාධිපතිවරණයේදී දයාසිරි ජයසේකර මහ ඇමතිතුමන් සමඟ එකට එක් වී ජනාධිපති මහින්ද රාජපක්‍ෂ මහතාගේ ජයග‍්‍රහණය වෙනුවෙන් වැඩ කිරීමට සූදානම් බවයි.
උත්සවය සඳහා වයඹ මහ ඇමති දයාසිරි ජයසේකර මහතාද සහභාගී විය.


தொலைத்தொடர்பாடல் வரி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி வரவு செலவுத்திட்டல் அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் தற்போது 20 வீதமாக காணப்படும் தொலைத்தொடர்பாடல் வரி, 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனாலும் இணையப் பாவனைக்கான வரி தொடர்ந்தும் 10 வீதமாகவே பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோலவே, கோதுமை மா, சீஸ், தயிர், மாஜரின், சோஸ் வகைகள், செசேஜ் வகை, இனிப்பு வகைகள், சொக்லேட்கள், சீரியல் வகைகள், பஸ்டா, மோல்ட் மூலம் தயாரிக்கப்பட்ட பியர், வினாகிரி, மரக்கறி, காளான், கடலை மற்றும் பழங்கள், பழரசம், நுளம்புச் சுருள், வெட்டப்பட்ட மலர்கள் மீதான செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அது குறித்த விபரங்கள்  வழங்கப்படவில்லை.






சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது

இந்தியாவின் அதியுயர்ந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது வழங்கி சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டுள்ளார். சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்ற நிலையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 
24 வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நிறைவுபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.
 
இதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட இந்தியாவின் பிரதமர் அலுவலகம், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவித்தது.
 
சந்தேகமில்லாமல் சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பான கிரிக்கெட் வீரர் எனக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலகம், உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கானவர்களை அவர் உத்வேகப்படுத்தியுள்ளதாகவும், அவர் ஒரு வாழும் ஜாம்பவனான் எனவும் தெரிவித்தது.
 
16 வயதில் தனது அறிமுகத்தை மேற்கொண்டதிலிருந்து கடந்த 24 வருடங்களில் அவர் உலகம் முழுதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளதாகவும், இந்தியாவிற்காக ஏராளமான போட்டிகளை வென்றுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர் அலுவலகம், உலகில் இந்தியாவின் விளையாட்டுக்களுக்கான சிறப்பான தூதுவராக அவர் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
சச்சின் டெண்டுல்கரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனைகள் ஒப்பிட முடியாதன எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் அலுவலகம், விளையாட்டில் அவரது சிறப்பான நடவடிக்கைகளுக்காக அவருக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
பாரத ரத்னா விருதைப் பெறும் முதலாவது விளையாட்டு வீரராகவும், இளையவராகவும் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Views: 501
 0 0 0 

தங்க இறக்குமதி தீர்வை குறைப்பு

Published on Sat Nov - 2013 48 Views
imagesதங்கத்துக்கான இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதமாகக் காணப்பட்ட தங்கத்துக்கான இறக்குமதி தீர்வை 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது வரவு – செலவுத் திட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி தீர்வை மீது விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத மேலதிக அறவீடு அகற்றப்படும் என அறிவித்தார்.
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து தங்கம் மீதான 10 சதவீத இறக்குமதி தீர்வை மீது 100 சதவீத மேலதிக அறவீடு விதிக்கப்பட்டது.

Friday, November 22, 2013


பயன்படுத்திய வாகனங்களின் விலை உயர்வு

2014ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்தில் பயன்படுத்திய வாகனங்கள் மீது அறவிடப்படும் இறக்குமதி தீர்வை தொடர்பாக பெறுமதித் தீர்வை கணிக்கும் முறையை அரசாங்கம் மாற்றியுள்ளதால் நாட்டில் இறக்குமதியாகும் பயன்படுத்திய வாகனங்களின் விலை உயரவுள்ளன என வாகன இறக்குமதியாளர் சங்க தலைவர் மஹிந்த சரச்சந்திரா கூறினார்.

இதுவரையில் 6 மாதங்கள் பயன்படுத்திய வாகனங்களுக்கு 90 சதவீத வரியும், 6 மாதம் தொடக்கம் 1 வருடம் வரை பயன்படுத்திய வாகனங்களுக்கு 80 சதவீத வரியும் என பயன்படுத்திய காலத்துக்கு தக்க வரி விதிக்கப்பட்டு வந்தது.

புதிய நடைமுயின்படி இரு வருடத்திலும் குறைவாக பாவனைக் காலம் உள்ள எந்த ஒரு வாகனத்துக்கும் 90 சதவீத வரி அறவிடப்படும்.

இந்த வரி அதிகரிப்பால் சிறிய கார்கள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றின் விலைகலில் 8 வீத அதிகரிப்பும் டீசல் வாகனங்களின் விலைகளில் 6 வீத அதிகரிப்பும்இ டபிள்காப் ரக வாகனங்களின் விலைகளில் 7 வீத அதிகரிப்பும் ஏற்படுமென சரச்சந்திரா கூறினார்.
 
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.