Midiyala Hot News

Blogger news

மடிகே மிடியால அல் ஹைராத் இனால் வழங்கப்பட்ட இப்தார் நிகழ்வு

Wednesday, July 31, 2013











Al-Hairath Nalanpuri Sanga IFTHARin Viseda Bayan,
Ash-Shekh Al-Haj M.I. Suhaib(Deeni)Avarkal.

Photos Taken By Atm Fazly

Admin
Tm Ijlan

மஹியங்கனை பள்ளிவாசல் தொடர்பில் நடைபெற்ற நாடகம்!

Sunday, July 28, 2013



மஹியங்கனை பள்ளிவாசல் பல வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் ஒரு பள்ளிவாசல் என்பது சகலரும் அறிந்த விடயம். மர்ஹும் அஷ்ரப் உள்ளிட்ட பலர் அங்கும் தொழுதும் உள்ளார்கள். பள்ளிவாசல் சட்டரீதியாக பதிவு செய்யப்பட்டதா இல்லையா என்ற வாதங்களைவிட அங்கு பள்ளிவாசல் இருந்துள்ளது. ஜும்ஆ உள்ளிட்ட இறை வணக்க வழிபாடுகளும் நடைபெற்றுள்ளன என்பதே பிரதானமானது.
அப்பள்ளிவாசல் ஸ்த்தாபகரும், பள்ளிவாசல் தலைவருமான சீனி முஹம்மது ஜப்னா முஸ்லிம் இணையத்துடன் இறுதியாக தொலைபேசியில் கதைக்கும்போது கூட அப்பள்ளிவாசல் குறித்து கண்ணீர் மல்கியிருந்தார்.அப்படிப்படட்டவரா மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லையென கடிதம் எழுதினார் என ஒட்டமொத்த முஸ்லிம் சமூகத்திற்கும்  கேள்விகள் எழுவதில் நியாயமுள்ளது.
பௌத்த சாசன அமைச்சிற்கு அவர் எழுதிய கடிதமும் தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையில் 28-07-2013 வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இந்தக் கடிதம் தொடர்பில் எமக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களை இங்கு அப்படியே தருகிறோம்.
தினகரன் வாரமஞ்சரியில் பள்ளிவாசல் பற்றிய, அப்பள்ளிவாசல் தலைவரின் கடிதம் ஞாயிற்றுக்கிழமை வெளியாக முன்னரே, ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு இலங்கை நேரப்படி சனிக்கிழமை, 27-07-2013 அன்று மாலை 6 மணியளவிலேயே இவ்வாறான ஒரு கடிதம் தினகரன் வாரமஞ்சரியில் வெளியாகவுள்ளதாக தகவல் கிடைத்தது.
அதேவேளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான தமிழ் மொழிபெயர்ப்பாளர் ராகுல்லன்தான் சிங்களத்தில் காணப்பட்ட இந்த கடிதத்தை தமிழில் மொழிபெயர்த்தவர் ஆவார். இந்த விவகாரத்துடன் முஸ்லிம் பிரதியமைச்சர் ஒருவர் நேரடி சம்பந்தப்பட்டுள்ளார்.
இவ்வாறான ஒரு கடிதம் வெளியிடப்பட்டதன் பின்னர் தம்மை சந்திக்கவுள்ள ஆளும்கட்சி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மஹியங்கனையில் பள்ளிவாசல் இருக்கவில்லை என அந்தக் கடிதத்தையும், பத்திரிகைச் செய்தியையையும் காண்பிப்பதே இங்கு நோக்கமாக இருந்துள்ளது. அதற்கேற்பவே தற்போதுவரை நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மஹியங்கனையில் பள்ளிவாசலே இருக்கவில்லை என்ற பிரச்சாரம் தற்போது முன்னெடுக்கப்படுகிறது. வேடுவர் தலைவர் உள்ளிட்ட பௌத்த குருக்களும் இந்தப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த பிரச்சாரத்திற்கு வலுசேர்ப்பதாகவே சீனி முஹம்மது பெயரில் வெளியாகியுள்ள கடிதமும் அமையப்போகிறது.
அதேநேரம் பள்ளிவாசல் தலைவரின் இந்த செய்தி வெளியானதிலிருந்து அவருடன் தொடர்புகொள்ள ஜப்னா முஸ்லிம் இணையம் 15 க்கும் மேற்பட்ட தடவைகள் முயன்றது. அவரின் கையடக்க தொலைபேசியில் ரிங் ஒலிக்கிறதே தவிர, மறுபக்கத்தில் எந்த பதிலும் இதுவரை வழங்கப்படவில்லை.
மஹியங்கனை பள்ளிவாசல் பதிவுசெய்யப்படாமல் இருந்திருக்கலாம். அதற்காக அது பள்ளிவாசலாக பயன்படுத்தப்படவில்லை என்பது சுத்தப்பொய். அந்த அல்லாஹ்வின் இல்லத்தின் சுஜுது செய்த பலர் இதற்கு ஆதாரமாக உள்ளனர். பெரும்பான்மை சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக மஹியங்கனையில் பள்ளிவாசலே இல்லையென கூறவருவது முற்றிலும் கணடிக்கத்தக்கது எனலாம்.!
இங்கு மேல்மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் எங்களிடம் ஒருமுறை கூறியதை ஞாபகப்படுத்த விரும்புகிறோம். நாட்டில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்களைவிட, பதிவு செய்யப்படாத பௌத்த விகாரைகளே அதிகம் என்பதாகும்..!

MidiyalaHot Admin...

-jaffnamuslim

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது – பொதுபல சேனா!

Friday, July 26, 2013

முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது – பொதுபல சேனா!

02d1a-untitledமுஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட மாட்டாது என பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது. முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து தாக்குதல்களையோ போராட்டங்களையோ நடத்தப் போவதில்லை என பொதுபல சேனா அமைப்பு உறுதியளித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சமய விவகார ஆலோசகர் அப்துல் காதர் மசூர் மௌலானாவிடம், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். பொதுபலசேனா தலைமையகத்தில் இரு தரப்பினருக்கும் இடையில் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
முஸ்லிம் எதிர் நடவடிக்கைகளுடன் தமக்கு தொடர்பில்லை என பொதுபல சேனா அறிவித்துள்ளது. சில குறுகிய நோக்கங்களைக் கொண்ட தரப்பினர் தமது பெயரைப் பயன்படுத்தி இவ்வாறான தாக்குதல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதாகத் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். முஸ்லி;ம் மக்களின் தனித்துவ அடையாளங்களை பாதுகாக்கும் முயற்சிகளுக்கு பொதுபல சேனா எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண வ...

Tuesday, July 16, 2013

 வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபை தேர்தலும், பூரண வ...: (ஏ.எல்.ஜுனைதீன்)     நடைபெறவிருக்கும் வடக்கு, வட மேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு 142 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கு 43 இலட்ச...

Tuesday, July 9, 2013

පුරුදු යතුරුපැදියෙන් ම හිටපු ඉරාන ජනපති ගෙදර යයි


Irudina-Page14

ரமழான் தலைபிறை தென்பட்டது: இன்றிரவு ரமழான் ஆரம்பம்


இணக்கம்...!


கொழும்பு, கிராண்ட்பாஸ், ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசலை மூடுமாறு கோரி இராவண சக்தி அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என இராவண சக்தி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இராவண சக்தி அமைப்பினர் மற்றும் ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் பிரதிநிகள் ஆகியோருக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பள்ளிவாசலை ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: கித்சிறி டி மெல்)


Monday, July 8, 2013

விஞ்ஞானிகளை வியக்க வைத்த திரு குர்ஆன்.

விஞ்ஞானிகல் உறுதிபடுத்தி யுள்ளனர்...
திரு குர்ஆன்
முஹம்மது (ஸல்) அவர்களின் சொந்த வார்த்தைகள் அல்ல, மாறாக உணமையான இறைவன் வார்த்தைகள் தான் என்று.

20 ஆம் நூற்றாண்டில் கூட கண்டு புடிக்க முடியாத பல
விஞ்ஞான தகவல்கலை 1435 ஆண்டிற்கு முன்பே அகில உலகத்தையும் படைத்த இறைவன் அதனுடைய வடிவத்தை
மிக தெளிவாக கூறிவிட்டான் எந்த வேதங்களிலும் இது வரை சொல்லபடாத பல உணமைகளை திருமறை குர் ஆனில் மட்டுமே.. புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே..

இந்த நூற்றாண்டில், கருவறையில் உள்ள பல நிலைகளை SCAN செய்து சொல்லப்படுவதை எந்த ஒரு கருவியும், இன்னும் electric கூட இல்லாத அந்த இருண்ட காலத்தில் மிக துல்லியமாக குறிப்பிட்ட குர்ஆன்.

படைப்புக்குளை பற்றி ......

ஒவ்வொரு பெண்ணும் (கர்ப்பத்தில்) சமந்து கொண்டிருப்பதையும், கர்ப்பப்பைகள் சரங்கி குறைவதையும், அவை விரிந்து அதிகரிப்பதையும் அல்லாஹ் நன்கறிவான்; ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் அளவு இருக்கின்றது (13:8)

பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு
ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.
பிறகு, நிச்சயமாக நீங்கள் மரணிப்பவர்களாக இருக்கிறீர்கள். பிறகு, கியாம நாளன்று, நிச்சயமாக நீங்கள் எழுப்பப்படுவீர்கள் (23: 14, 15, 16.)

மலைகளை பற்றி திரு குர் ஆன்

பல அடுக்குகள் கொண்ட இந்த பூமி ஒரு மணிக்கு 5500 Km வேகத்தில் சுழன்று கொண்டும் 100900 km வேகத்தில் நகர்ந்து கொண்டும் சூரியனை சுற்றி வருகிறது.
இவ்வாறான வேகத்தில் ஓடும் பூமி குலுங்காமல் இருபதற்கு காரணம் மலைகள் ஆணி போன்று நிறுவப்பட்டுள்ளது. இதை சமீபமாக கண்டு புடிதத்தை திரு மறை யில் அன்றே இறைவன் கூறிவிட்டான்.

அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான். (32)

உங்களுடன் பூமி அசையாதிருப்பதற்காக அவன் அதன் மேல் உறுதியான மலைகளை நிறுத்தினான்; இன்னும் நீங்கள்
சரியான வழியை அறி(ந்து செல்)வதற்காக அவன்
ஆறுகளையும் பாதைகளையும் (அமைத்தான்).(15)

இது போன்று இன்னும் பல உண்மைகளை கண்டறிந்த மக்கள் இன்று அலை அலையாய் இஸ்லாத்தை நோக்கி
தலுவிகிறார்கள் இறைவனுடைய நாட்டத்தால்.

இன்று இதை படித்து கொண்டிருக்கும் முஸ்லிம் அல்லாத நண்பர்களே சற்று சிந்தியுங்கள் இது போன்ற சத்தியத்தை எடுத்து சொல்லி நேர் வழியில் அழகிய முறையில் அழைக்கும் எங்களை ஏன் பலர் நாங்கள் தீவிரவாதி தீவிரவாதி என்று
சித்தரிகிறார்கள் ????

காரணம் நாங்கள் சத்தியத்தை கொண்டு அசத்தியத்தில் வீசுகிறோம் இறைவன் ஒருவன் தான் என்று. இன்னும் நன்மைகளை ஏவுகிறோம் தீமைகளை தடுக்கிறோம் ஆனால் இதை பிடிக்காத சில எதிரிகள் மீடியாக்களின் வழியாக எங்களை தடுக்க தீவிரவாதி என்று உங்கள் முன் விளம்பரம் செய்கிறார்கள்.

எனவே நீங்கள் திரு குரானை திறந்த மனதுடன் படிங்கள் பிறகு நீங்கள் உண்மையை அறிந்து கொள்வீர்கள்,

எங்களுடைய நோக்கம் நீங்கள் புனர் ஜென்மத்தில்
(மறுமை வாழ்கையில்) வெற்றி பெற்று சொர்க்கம்
செல்ல வேண்டும் என்பதே.
கீழே உள்ள website bookmark செய்து படித்து வாருங்கள்.
http://tamilqran.in/

நாங்கள் தினமும் உங்களுக்காக பிராத்தனை செய்து வருகிறோம். இறைவன் நாடினால் நீங்கள் முழுவதுமாக நேர்வழி பெறுவீர்கள்.. அந்த மிக பெரிய பாக்கியத்தை உங்களுக்கு அவன் விரைவில் வழங்குவானாக ஆமின்

ஜம்மியத்துல் உலமா சபை தலைவராக மீண்டும் றிஸ்வி முப்தி – ஜனாதிபதி வாழ்த்து!

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷைஹ் ரிஸ்வி முப்த்தி அவர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவராக 4 வது முறையாகவும் எதிர்வரும் 3 வருடங்களுக்காக அவர் தெரிவு செய்யப்பட்டமைக்காகவே ஜனாதிபதி இவ் வாழ்த்தினைத் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களது இல்லத்தில் நடைபெற்ற இராப்போசன விருந்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி, இது விடயம் பேசப் பட்டதும் உடனே தொலைபேசி மூலம் ரிஸ்வி முப்த்தியை தொடர்பு கொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுடன் வாழ்த்தினையும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஜம்மியத்துல் உலமா சபையின் நிர்வாக குழுவில் கடந்தமுறை பணியாற்றிய பலரே தொடர்ந்தும் புதிய நிர்வாக குழுவிலும் பணியாற்றவுள்ளதாக ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார்.
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.