இணக்கம்...!
கொழும்பு, கிராண்ட்பாஸ், ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசலை மூடுமாறு கோரி இராவண சக்தி அமைப்பினர் இன்று செவ்வாய்க்கிழமை புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சிற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது குறித்த பள்ளிவாசல் சட்டவிரோத கட்டிடம் என இராவண சக்தி அமைப்பினர் குற்றஞ்சாட்டினர். எவ்வாறாயினும் இந்த ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து இராவண சக்தி அமைப்பினர் மற்றும் ஷைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் பிரதிநிகள் ஆகியோருக்கு இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
புத்தசாசன மற்றும் சமய விவகார அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது. இதன்போது குறித்த பள்ளிவாசலை ஒரு மாத காலத்திற்குள் இடமாற்றுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. (படங்கள்: கித்சிறி டி மெல்)
No comments:
Post a Comment