Midiyala Hot News

Blogger news

இலங்கை அணி வீரர்களுக்கு தலா 2 1/2 கோடி ரூபா பரிசு

Tuesday, April 15, 2014

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா இரண்டரைக் கோடி ரூபா வீதம்’ பரிசு வழங்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

இதுவரை இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரே தடவையில் இலங்கை அணி வீரர்களுக்கு கிடைத்த மிக கூடுதலான தொகை இது எனவும் அறிவிக்கப்படுகிறது.

அண்மையில் பங்களாதேஷில் நடைபெற்ற 20க்கு இருபது உலகக் கிண்ண போட்டியை இலங்கை அணி முதற் தடவையாக சுவீகரித்தது.

புதுவருட உதயத்துடன் இலங்கை அணி வீரர்கள் 15 பேருக்கும் பரிசுத் தொகையில் தலா 25 மில்லியன் ரூபா வீதம் அன்பளிப்பு செய்ய இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை தவிசாளர் ஹுஸ்னி மொஹமட் தெரிவித்தார். இதன் படி சகல அணி வீரர்களுக்கும் மொத்தமாக 2.8 மில்லியன் ரூபா வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 20க்கு இருபது கிண்ணத்தை வெற்றிகொண்ட இலங்கை அணிக்கு உலக கிரிக்கெட் சபை வழங்கிய பரிசுத் தொகை இவ்வாறாக அணியை பிரதிநிதித்துவப்படுத்திய 15 வீரர்களுக்கும் சரிசமமாக பகிரப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.