RELEASED:
August 5 il Nadaipera Ulla
G.C.E.A/L 2013
Pareetchaikana
TimeTable Veliyaki Ullathu.
Download Seayya:
http://www.doenets.lk/exam/docs/al2013/NEW-Syllabus-2013.pdf
RELEASED: G.C.E.A/L 2013 Exam Timetable
Friday, May 31, 2013
Sunday, May 19, 2013
Sunday, May 12, 2013
ஹலால் தொடர்பில் இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்க தீர்மானம்.
(VI) ஹலால் சான்றிதழ் விநியோகம் தொடர்பில் ஆராய்வதற்காக
நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழு, விரைவில் இறுதி அறிக்கையொன்றை
அமைச்சரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக்
குழுவிற்கு முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தலைமை தாங்கினார்
என்பது குறிப்பிடத்தக்கது.
.
அமைச்சரவையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னதாக
உறுப்பினர்கள் இது குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாக குழுவின் உறுப்பினர்
ஏ.எச்.எம். பௌசீ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அறிக்கையின்
உள்ளடக்கங்கள் பற்றி தெரியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
.
இறுதியாக கூடி ஆராய்ந்து இறுதி அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உகண்டாவுக்கு ஜனாதிபதி விஜயம்
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றிரவு உகண்டாவுக்கு பயணமாகியுள்ளார்.
இந்த விஜயத்தின் போது உகண்டா ஜனாதிபதி யோவெரி முசெவெனியை சந்திக்கவுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கவுள்ளார்.
மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக புதனன்று மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி
மின்
கட்டண அதிகரிப்புக்கு எதிராக 150 தொழிற்சங்கள் மற்றும் 50 பொது
அமைப்புக்கள் இணைந்து கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை
ஏற்பாடு செய்துள்ளன.
இது எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு, கெம்பல்பிட்டி மைதானத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. கொழும்பு, கெம்பல்பிட்டி மைதானத்திலிருந்து கோட்டை புகையிரத நிலையம் வரை இந்த ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பால் மாவின் விலை அதிகரிப்பு?
சனிக்கிழமை, 11 மே 2013 20:49
0 COMMENTS
400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பால் மாவின் விலை அதிகரிப்பு?
400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையும் டொலரின் பெறுமதிக்கேற்ப ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு பால்மாவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு பால்மாவை ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிரதான நாடுகள், ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலையை 5000 டொலர்களால் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பால் மா இறக்குமதிக்காக அறவிடப்படும் இறக்குமதி வரியையும் குறைக்குமாறு பால் மா உற்பத்தி நிறுவனங்கள், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பால் மாவின் விலை அதிகரிப்பு?
400 கிராம் பால்மா பைக்கற்றின் விலை 40 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா உற்பத்தி நிறுவனங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ளமையும் டொலரின் பெறுமதிக்கேற்ப ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளமையுமே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதைய சந்தைப் பெறுமதிக்கு பால்மாவை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதால் இது தொடர்பில் பால் மா உற்பத்தி நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு பால்மாவை ஏற்றுமதி செய்யும் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிரதான நாடுகள், ஒரு மெட்ரிக் தொன் பால் மாவின் விலையை 5000 டொலர்களால் அதிகரித்துள்ளன.
இந்நிலையில், பால் மா இறக்குமதிக்காக அறவிடப்படும் இறக்குமதி வரியையும் குறைக்குமாறு பால் மா உற்பத்தி நிறுவனங்கள், அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாப்பரசரருக்கு பணிவிடை செய்த ஒருவர் ஊடகங்களுக்கு வழங்கிய ஆச்சர்யம் மிக்க தகவல்கள்.
Sunday, May 5, 2013
கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பதவியைத் துறந்த போப் பெனடிக் அவர்களின் பின்னால் பல மர்மங்கள் மறைந்திருக்கின்றன.
பாப்பரசரருக்கு பணிவிடை செய்பவர்களுள் ஒருவர் ஆச்சர்யம் மிக்க தகவல்களை ஊடகங்களுக்கு வழங்கி இருக்கின்றார்.
அவற்றுள், கடந்த ஞாயிறு தினத்தன்று போப் அவர்கள் முஸ்லிம்கள் வணங்குவதற்கு தகுதியான திசையாக எடுக்கும் மக்கா திசையை நோக்கி எழுந்து நின்று வணக்கமொன்றை மேற்கொண்டதாகவும், அது ‘அஸ்ர்’ எனப்படும் முஸ்லிம்களின் ஐவேளைத் தொழுகைகளில் ஒன்றாக இருந்தது’ எனவும் கூறியிருந்தார்.
மேலும் 2006ல் இருந்து இஸ்லாமிய மறையான அல்குர்ஆனைப் படிப்பதில் போப் பெனடிக் அவர்கள் ஆர்வம் காட்டி வந்ததாகவும் கூறியிருந்தார்.
இச்செய்தியைக் கேட்டதும் மீடியாக்கள் அதிர்ச்சியடைந்தன. தங்களது ஒளி-ஒலிபரப்பு சாதனங்களை கீழேவைத்துவிட்டு, வத்திக்கான் வணக்கஸ்தலத்தின் ஊடகப் பிரிவில் போப் அவர்களைக் காண இருந்தவர்கள் வாயடைத்துப் போயினர். நம்ப முடியாமல் தங்களது அலுவலகங்களை நோக்கித் திரும்பினர்.
இதைவிட, ஆம்! போப் அவர்கள் சென் பீட்டர்ஸ் பஸிலிகா தேவாலயத்தின் பல்கனியில் 5 வேளையும் மக்காவை நோக்கி தொழுது வந்திருக்கின்றார் எனவும், அல் குர்ஆனை அவர் படித்து வந்தார் என்பதும் தற்பொழுது வத்திக்கான் சென் பீட்டர்ஸ் தேவாலயத்தின் போப் அவர்களின் அதி நம்பிக்கைக்குரியவர்களால் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இதற்கிடையில் மேற்கத்தேய ஆங்கில ஊடகங்கள் இச் செய்தியை மிக இரகசியமாக பேணி கையாண்டு வருவதாகவும், இது பற்றிய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிய வருகிறது.
சில கிறிஸ்துவ ஆங்கில ஊடகங்கள் ‘பாப்பரசர் இஸ்லாத்தை தழுவியது எனும் செய்து வெறும் கட்டுக் கதையே’ என்பதாக ஊர்ஜிதப்படுத்தி வருகின்றன.
எப்படி இருந்த பொதிலும் ‘ முஸ்லிம்களுக்கு ஏற்படும் துன்பங்களின் போது முஹம்மது நபி அவர்களை மேற்கோள் காட்டி அமைதிப்படுத்தி வந்ததும், கடவுள் ஒருவர் இருந்தால் நிச்சயமாக அவர் ஒருவரே என்றும் அவர் அல்லாஹ்வைத் தவிர வேறு எவராகவும் இருக்க முடியாது’ எனவும் ஊடகத்திற்கு பகிரங்கமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை அறிவித்திருந்ததும் உலகறிந்த விடயமே!
அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கொழும்பு
மாநகர சபையின் பிரதி மேயர் அஸாத் சாலிக்கு 3 மாத தடுப்புக்காவல் உத்தரவு
பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்.ேபாது குற்றப்புல்னாய்வுப்பிரிவினரின்
நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அசாத் சாலி எதிர்வரும் 3 மாதங்களுக்கு
குற்றப்புலனாய்வுப்பிரிவினரின் கட்டுப்பாட்டில் விசாரணை செய்யப்படவுள்ளதாக
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் புத்திக்க சிறிவர்த்தன தெரிவித்தார்
புலிகளால் சுட்டு வீழ்த்தப்பட்ட 'லயன் எயார்' விமானத்தின் பாகங்கள் ஆழ்கடலிலிருந்து மீட்பு
Saturday, May 4, 2013
-ரொமேஸ் மதுசங்க
14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டன.
வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டனர்.
இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரே மேற்படி விமானத்தில் பாகங்கள் விழுந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு சென்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு, மேற்படி விமானத்தின் பாகங்களை கரையொதுக்குமாறு நீதிமன்ற கட்டளை பிறப்பித்தது.
இதற்கமைய மேற்படி கடற்பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட நிலையில், இன்றைய தினம் மேற்படி விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
14 வருடங்களுக்கு முன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக நம்பப்படும் 'லயன் எயார் - அன்டனோவ் 24' ரக உள்நாட்டு பயணிகள் விமானத்தின் நொருங்கிய பகுதிகளில் சில, இன்று சனிக்கிழமை மீட்கப்பட்டன.
வடபகுதி கடற்பரப்பின் இரணைத்தீவுக்கு அண்மையில் கடலுக்கு அடியிலிருந்து இந்த விமானத்தின் சிதைவடைந்த பாகங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
விமானத்தின் என்ஜின், மோட்டர் மற்றும் விமானத்தின் பின்புறப் பகுதிகள் சில இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இலங்கை கடற்படைக்குச் சொந்தமாக கப்பலொன்றின் உதவியுடன் இந்த விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த விமானத்தின் பாகங்கள் கடலுக்கு அடியில் மிகவும் ஆழமான பிரதேசத்தில் இருப்பதால் அவற்றை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் மேற்குறிப்பிட்ட சில பாகங்களை மாத்திரமே தற்போதைக்கு மீட்க முடிந்ததாகவும் கடற்படையினர் அறிவித்தனர்.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் குறித்த கடற்பிரதேசத்துக்குச் சென்ற பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் தலைவர் பொலிஸ் அத்தியட்சகர் அசங்க கரவிட்ட, பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக சிறிவர்தன உள்ளிட்ட பொலிஸ் மற்றும் முப்படையைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்டவர்கள் மேற்படி விமானத்தின் பாகங்களை மீட்டனர்.
இந்த விமானத்தின் பாகங்கள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவற்றை கரைக்கு எடுத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, தொல்பொருள் அகழ்வாராய்ச்சி திணைக்கள அதிகாரிகள், நாரா நிறுவனத்தின் அதிகாரிகள், அரசாங்க பகுப்பாய்வு பிரிவு அதிகாரிகள், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய சிரேஷ்ட சட்டத்தரணிகள், அரசாங்க அளவைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரே மேற்படி விமானத்தில் பாகங்கள் விழுந்து கிடப்பதாகத் தெரிவிக்கப்படும் பகுதிக்கு சென்றனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட விமானத்தின் பாகங்கள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் எம்.வை.மஹப்தீன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
பலாலி விமான நிலையத்திலிருந்து கடந்த 1998ஆம் ஆண்டு செப்டெம்பர் 29ஆம் திகதி 48 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் மற்றும் இரு உக்ரேனிய விமானிகளுடன் இரத்மலானைக்கு போகப் புறப்பட்ட இந்த விமானம், புறப்பட்டு 10 நிமிடங்களின் பின் ராடார் திரையிலிருந்து மறைந்துபோனது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏவுகணைத் தாக்குதலில் இந்த விமானம் வீழ்த்தப்பட்டதாக நம்பப்படுகின்றது. இருப்பினும், இதன் மர்மம் இன்னும் பூரணமாகத் துலங்காத நிலையில் மேற்படி விமானத்தின் பாகங்களை கடற்படையினர் கண்டுபிடித்துள்ளர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினருக்கு, மேற்படி விமானத்தின் பாகங்களை கரையொதுக்குமாறு நீதிமன்ற கட்டளை பிறப்பித்தது.
இதற்கமைய மேற்படி கடற்பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை சென்ற அதிகாரிகள் அங்கு ஆய்வுகளில் ஈடுபட்ட நிலையில், இன்றைய தினம் மேற்படி விமானத்தின் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை பொருட்கள் மீதான சுங்க வரியை பாகிஸ்தான் தளர்த்தியது
• தேங்காய் எண்ணெய் (Crude coconut oil) ஏற்றுமதி 100% தள்ளுபடி!
• இலங்கை - பாக்கிஸ்தான் வர்த்தகம் 174% உச்ச நிலை!
• 2012இல் மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 433,69 மில்லியன்
• 2013 இறுதிக்குள் 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு அமர்வுகள்
• செயலாளர் மட்ட கூட்டங்கள் இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக முடிவு
'இலங்கை, பாகிஸ்தான் இருதரப்பு வர்த்தக உறவுகள் மற்றும் ஒத்துழைப்புகள் இவ்வருட இறுதிக்குள் இடம்பெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு கூட்டத்தொடரில் திருப்தியாக இருக்கும் அத்துடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ - பாகிஸ்தான் அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளையடுத்து, இலங்கையின் சில ஏற்றுமதி பொருட்கள் மீதான தீர்வைகளை பாகிஸ்தான் தளர்த்தியுள்ளது' என கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அமைச்சர் பசிலை கௌரவித்து இலங்கையின் ஏற்றுமதி பொருட்கள் மீதான வரியை குறைக்க நடவடிக்கை எடுத்த பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு நன்றியை தெரிவிக்கின்றேன். எமது இரு நாடுகளிற்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் கீழ் பல வாய்ப்புகள் இருக்கின்றதை நான் ஒப்புக்கொள்கிறேன். எனினும் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தப்படவில்லை. இந்த தருணத்தில் அதனையும் ஏற்படுத்த முயலவேண்டும் இதன் அடிப்படையாக இரு நாடுகளிற்கும் இடையில் வர்த்தக ஒப்பந்தம் மேலும் பலப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
விசேட உத்தியோகபூர்வ அழைப்பினை அடுத்து இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி, அண்மையில் கொழும்பு 03இல் அமைந்துள்ள கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் வளாகத்தில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனை சந்தித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ் எமக்கு பல சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. எனினும், நாம் அதனை முழுமையாக பயன்படுத்தவில்லை. தற்போது இதனை பயன்படுத்திக்கொள்வது எமக்கு நல்ல தருணம்.
பலதரப்பட்ட எமது வர்த்தகம் மேலும் விரிவுபடுத்தப்படவேண்டும். எடுத்துக்காட்டாக 4 - 5 வரையிலுள்ள முக்கிய பொருட்கள் மீதான வரி தளர்வை மேலும் கவனத்திற்கொள்ள முடியும். உதாரணமாக பாகிஸ்தானில் பாரிய சீனி தொழிற்சாலைகள் இருக்கின்றன. ஆனால் இலங்கை சீனியினை இங்கிருந்து இறக்குமதி செய்வதில்லை. அத்துடன், வர்த்தக சம்மேளனம் இருதரப்பு வர்த்தகம் நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு பல முதலீட்டு ஏற்பாடுகளை செய்கின்றது' என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் காசிம் குரேஷி மேலும் தெரிவித்தார்.
'தற்போது இலங்கையில் 25 முதலீட்டு சபை திட்டங்களில் பாகிஸ்தானிய முதலீட்டாளர்கள் முதலீடுதுள்ளனர். அவை ஆடைகள், இரசாயனங்கள், பெற்ரோலியம், ரப்பர், பிளாஸ்டிக், தோல் பொருட்கள் உற்பத்தி, உணவு, பானங்கள் மற்றும் புகையிலை என்பனவாகும். பாகிஸ்தானூடாக மேற்கொள்ளப்பட்டு ஏற்றுமதி வரி தொடர்பில் இலங்கை பல இடர்களை எதிர்நோக்குகின்றது. ஆனால் நாம் இலங்கைக்கு மூன்று முக்கிய பொருட்களான தேங்காய் எண்ணெய், வெற்றிலை மற்றும் குப்பி போத்தல்கள் குளிரூட்டும் இயந்திரங்கள் மீதான வரி தளர்வினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்' என பாகிஸ்தானின் உயர்ஸ்தானிகர் குரேஷி மேலும் தெரிவித்தார்.
வர்த்தக திணைக்களத்தின் புள்ளிவிபர அடிப்படையில் இலங்கை 5000 - 6000 (மெ.தொ) வெற்றிலையை பாகிஸ்தானுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்கின்றது. அதனை தொடர்ந்து இலங்கை தாய்லாந்து, இந்தியா, பங்களாதேஷி ஆகிய நாடுகளுக்கு ஏக வழங்குநராக ஈடுபடுகின்றது.
பாகிஸ்தான் வெற்றிலைக்கான தனது இறக்குமதி தீர்வினை 35 வீதமாக குறைத்துள்ளது. 2010ஆம் ஆண்டு அமெரிக்க டொலர் 5.77 மில்லியன் வெகுமதியான வெற்றிலையினை பாகிஸ்தானுக்கு இலங்கை ஏற்றுமதி செய்தது. அத்துடன் தேங்காங் எண்ணெய் வரியினை 50 வீதமாகவும் குறைத்து, அது ஜூலை மாதத்திலிருந்து அமுலுக்கு வருவதற்கான ஏற்பாடுளையும் செய்துள்ளது.
சார்க் பிராந்தியத்தில் இலங்கையின் தயாரிப்புகளை வாங்குபவரகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் இரண்டாவது இடத்தை வகிக்கின்றன. இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 10% சார்க் பிராந்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
2005ஆம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் அமுலாக்கியதிலிருந்து எமது இரு நாடுகளுக்கான வர்த்தக உறவு பாரிய அனுபவத்துடன் வளர்ச்சியுற்றது. 2005ஆம் ஆண்டு எமது மொத்த வர்த்தகம் அமெரிக்க டொலர் 158 மில்லியனாக அதிகரித்ததுடன், 174 வீத வளர்ச்சியினை காட்டுகின்றது என அமைச்சர் ரிஷாட் சுட்டிக்காட்டினார்.
வர்த்தக சமநிலை எப்போதும் பாக்கிஸ்தானுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. பாக்கிஸ்தானுக்கு இயற்கை ரப்பர், காய்கறி பொருட்கள், தேங்காய், பிரேசில் கொட்டைகள், தேயிலை, மரம், புண்ணாக்கு, புதிய வாயு டயர்கள் (ரப்பர்), தேங்காய் (கொப்பரை) எண்ணெய் ஆகியன இலங்கையின் முக்கிய ஏற்றுமதி ஆகின்றன.
2013ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் நடைபெறவுள்ள 11ஆவது கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடரில் அமைச்சர் ரிஷாத் மற்றும் பாகிஸ்தானிய உயர் ஆணையாளர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கூட்டுப் பொருளாதார ஆணைக்குழு தொடர் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் 29 - 30 வரை இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றது. இதற்கு முதல் 2011ஆம் ஆண்டு இஸ்லாமாபாத்தில் வெற்றிகரமாக முடிவுற்றது. இவ் கூட்டத்தொடரில் ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பில் பொருட்கள், சேவைகள், விவசாயம், சுற்றுலா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் விமான சேவைகள், மற்றும் தொழில்நுட்ப உதவி வர்த்தகம் உள்ளிட்டவிடங்கள் கலந்துரையாடப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)