Midiyala Hot News

Blogger news

காணாமல் போன விமானமும், வீணாய் பரவும் பொய் செய்திகளும். உங்கள் சந்தேகங்களுக்கு இக்கட்டுரை பதில்.

Thursday, March 13, 2014



கடந்த சனிக்கிழமை அதிகாலை பெய்ஜிங் செல்லும்போது இடைவழியில் வைத்து காணாமல்போன மலேசியன் எயார்லைன்ஸ் MH370 என்கின்ற பயணிகள் விமானத்தினை தேடுகின்ற பணி ஐந்தாவது நாளாக இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.

முடிவுகள் எதுவும் எட்டப்படாமல் விமானத்தை தேடுகின்ற பணியில் பத்து நாடுகள் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் "காணாமல் போன விமானம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக பலரும் போலியான செய்திகளை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்"

உண்மையில் இந்த விமானம் தெற்கு சீனக்கடல் பகுதியில் பறந்துகொண்டிருக்கும்போதுதான் ராடாரிலிருந்து மறைந்திருக்கின்றது. ஆனால் மீட்புக்குழுவினர் மலாக்கா நீரிணைப்பகுதியில் விமானத்தை தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த விமானம் மறையும்போது ராடாரிலிருந்து எந்தவிதமான அபாய சமிக்ஞைகளும் விடுக்கப்படவில்லை. காணாமல் போன போயிங் 777-200 வகை விமானங்கள் அதியுயர் தொழிநுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை விமானம் பறக்கின்ற சமயம் அதில் தொழிநுட்ப கோளாறுகள் ஏற்படுமிடத்து விமானத்தில் இருந்து தன்னியக்கமாகவே செய்திகள் பராமரிப்பு அறைக்கு அனுப்பபடும்.ஆனால் பெரும்பாலான விமானங்களில் கோளாறுகள் ஏற்படுமிடத்து விமான கட்டுப்பாட்டு அறைக்கே தகவல் அனுப்பப்படும் அதுவும் விமானியின் மூலம். இந்தவகையான விமானங்கள் அதற்கு நேர் மாற்றம் மிக்கவை இவை தானாகவே செய்திகளை அனுப்பும் திறன்கொண்டவை.

விமானம் காணமல் போகின்ற சமயம் இப்படியான அபாய சமிக்ஞைகள் எதுவும் பெறப்படவில்லை என்று அடித்துக்கூறுகிறது மலேசிய சிவில் விமான போக்குவரத்து துறை. அவர்கள் விமானம் கடத்தப்பட்டு விட்டது என்கின்ற கோணத்திலேயே இப்போது விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளார்கள். அதற்கு அவர்கள் கூறும் அடிப்படை காரணங்கள் சில,

விமானம் ராடாரிலிருந்து மறைவதற்கு முன்பு எதுவித அபாய சமிக்ஞைகளும் கட்டுப்பாடு அறைக்கு கொடுக்கப்படாமல் சென்ற பாதையிலிருந்து கோலாலம்பூருக்கு திரும்பியிருக்கிறது இது ஏன் என்பது யாருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

தீவிரமாக கப்பல்கள் மற்றும் விமானங்கள் மூலமாகத் தேடப்பட்டாலும் விமானத்தின் எந்த ஒரு சிறு பாகம் கூட இப்போது வரை கடலிலோ, தரையிலோ கண்டெடுக்கப்படவில்லை. விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சில நொடிகளுக்கு முன்னர் பாதையில் இருந்து மாறி சென்றிருப்பதால் தேடும் இடத்தின் பரப்பளவு தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும், மலேசியாவுக்கும் நடுவில் உள்ள மலாக்கா ஜலசந்தியின் வடக்குப் பகுதியில் தேடப்படுகிறது. இந்த இடம் விமானம் கடைசியாகப் பறந்த இடத்தைவிட மேற்கில் உள்ளது. ஏன் சம்பந்தம் இல்லாமல் இங்கு தேடுகிறீர்கள் ? என்று மலேசிய சிவில் ஏவியேஷன் துறைத் தலைவர் அசாரூதீன் அப்துல் ரகுமானிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, "சில விஷயங்களை மட்டுமே உங்களிடம் சொல்ல முடியும். சில விஷயங்களை என்னால் உங்களிடம் சொல்ல இயலாது" என்றார்.

மலேசியாவைச் சேர்ந்த பெரிதா ஹரியன் நாளிதழுக்கு விமானப் படைத்தளபதி ராட்சலி தவுத் அளித்த பேட்டியில், மிலிட்டரியின் ராடாரில் நள்ளிரவு 2.40 மணிக்கு MH370 விமானம் மலாக்கா ஜலசந்தியின் வடபகுதியில் இருக்கும் புலாவ் பேராக் தீவின் அருகே கடைசியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிவிலியன் ரேடாரில் இறுதியாக பதிவான இடத்துக்கும் மிலிட்டரி ரேடாரில் பதிவான இந்த இடத்துக்கும் கிட்டத்தட்ட 300 கி.மீ. வித்தியாசம் . மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் வழிமாறிய விமானம், அதன்பின் தாழ்வாகப் பறந்து மலாக்கா ஜலசந்தியை நோக்கித் திரும்பியது தற்போது உறுதியாகியுள்ளது. ஆனால்,இந்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை என மலேசிய அதிகாரிகள் இன்று மறுத்துள்ளனர்.

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தில் பயணித்த பயணிகள் பற்றிய தகவல்களை விமான நிறுவனம் வெளியிட்டுள்ளது.

1. சீனா/தாய்வான் - 152 + 1 குழந்தை

2. மலேசியா - 38

3. இந்தோனேசியா - 7

4. ஆஸ்திரேலியா - 6

5. இந்தியா - 5

6. அமெரிக்கா - 3 + 1 குழந்தை

7. பிரான்ஸ் - 4

8. கனடா - 2

9. நியூசிலாந்து - 2

10. உக்ரைன் - 2

11. இத்தாலி - 1

12. நெதர்லாந்து - 1

13. அவுஸ்திரேலியா - 1

14. ரஷ்யா - 1

இப்போதைய நிலவரப்படி 10 நாடுகள் தெற்கு சீன கடல் பகுதியில் (South China Sea) விமானத்தைத் தேடி வருகின்றன. மலேசியா இந்தத் தேடுதல் பணியை முன்னின்று நடத்துகிறது. சீனா, அவுஸ்திரேலியா, தாய்லாந்து, இந்தோனேஷியா, வியட்நாம், சிங்கப்பூர், ஃபிலிப்பைன்ஸ், நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மலேசியாவுடன் இணைந்து தேடுகின்றன.

மலேசியா - 14 கடற்படைக் கப்பல்கள் + 13 கோஸ்ட் கார்டு படகுகள் + 16 விமானங்கள்

வியட்நாம் - 8 கப்பல்கள் + 7 விமானங்கள்

சிங்கப்பூர் - 2 போர்க்கப்பல்கள் + 1 நீர்மூழ்கி உதவிக் கப்பல் + 1 சிகோர்ஸ்கி கடற்படை ஹெலிகாப்டர் + 1 C-130 விமானம்

அவுஸ்திரேலியா - 2 P-3C விமானங்கள் + 2 விமானப்படை கண்காணிப்பு விமானங்கள்

தாய்லாந்து - சூப்பர் லினக்ஸ் கடற்படைக் கப்பல் + 1 ரோந்துக் கப்பல்

ஃபிலிப்பைன்ஸ் - 1 ஃபோக்கர் F-27 விமானம் + 1 ஐலாண்டர் விமானம் + 2 ரோந்துக் கப்பல்கள்

இந்தோனேசியா - 4 அதிவிரைவு ரோந்துக் கப்பல்கள் + 1 கடல்பகுதி ரோந்து விமானம்

சீனா - 9 போர்க்கப்பல் + 1 பீரங்கிக் கப்பல் + 1 லேண்டிங் கிராஃப்ட் கப்பல் + 1 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல் + 1 கமாண்டோ கேரியர் வகை கப்பல் + 50 கடற்படை வீரர்கள்

அமெரிக்கா - தெற்கு சீன கடல் பகுதியில் ஏற்கனவே பயிற்சியில் இருந்த 2 டெஸ்ட்ராயர் வகை போர்க்கப்பல்கள் + 2 MH60 சீஹாக் ஹெலிகாப்டர்கள் என்பவற்றை வழங்கியிருக்கின்றது. மேலும்,

அமெரிக்காவில் இருந்து NTSB (National Transportation Security Board) வல்லுனர்களும், போயிங் விமான நிறுவனத்தின் வல்லுனர்களும், FAA (Federal Aviation Administration) நிபுணர்களும் கோலாலம்பூருக்கு விரைந்திருக்கின்றனர். சீனா தன்னிடம் இருக்கும் 10 ஹை-ரெசல்யூஷன் சட்லைட்டுகளை இந்த தேடுதல் பணிக்காக திருப்பிவிட்டிருக்கிறது,

தேடுதல் பணியின்போது கடலில் எண்ணெய்ப் படலங்கள் மிதந்துகொண்டிருந்ததைப் பார்த்த தேடுதல் குழுவினர், அதை ஆராய்ச்சி செய்ததில் அது விமானத்தின் எரிபொருள் அல்ல என்று தெரிவித்துள்ளனர். வியட்நாம் விமானப் படையினர் தேடும்போது விமானத்தின் கதவு போன்ற ஒரு பாகம் கடலில் மிதப்பதைப் பார்த்திருந்திருக்கின்றனர், ஆனால், அது கடலில் செல்லும் கேபிளின் கெப் என்று தெரியவந்துள்ளதாக மலேசிய சிவில் ஏவியேஷன் துறையின் இயக்குனர் அசாரூதீன் அப்துல் ரகுமான் கூறியுள்ளார். எனவே, இப்போதைய நிலவரப்படி விமானத்தின் ஒரு பாகம்கூட கிடைக்கவில்லை என்பதே உண்மை.

மாயமான மலேசிய விமானத்தின் பைலட்டின் பெயர் ஜஹாரி அஹமத் ஷாஹ். 33 வருடங்களாக பைலட்டாக இருக்கும் இவருக்கு 53 வயது ஆகிறது. மொத்தம் 18,365 மணி நேரங்கள் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவர். விமானம் ஓட்டுவதை தொழிலாகப் பார்க்காமல் விருப்பத்தின் பெயரால் செய்தவராம். தற்போது தான்இயக்கிய போயிங் 777 விமானத்தின் மீது பெரும் ஆர்வம் கொண்ட இவர், வீட்டில் அதே விமானத்தின் சிமுலேட்டரை அமைத்து, அதில் பயிற்சி பெற்று வந்தார் என்கின்றனர் அவருடன் வேலை பார்த்தவர்கள்.

சிமுலேட்டர் பயிற்சி பெறும் மற்ற விமானிகளுக்கு பரீட்சை வைக்க, மலேசிய சிவில் ஏவியேஷன் துறையினால் ஜஹாரி அஹமத் ஷாஹ் அங்கீகரிக்கப்பட்டவர் என மலேசியன் ஏர்லைன்ஸில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.

33 வருடங்களாக மலேசியன் ஏர்லைன்ஸில் பணியாற்றும் இவர் ஃபோக்கர் F50, ஏர்பஸ் A300 மற்றும் போயிங் 737 போன்ற பலதரப்பட்ட விமானங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். மலேசிய விமானம் மாயமானதற்கு விமானிகளின் தவறு காரணமாக இருக்கவே வாய்ப்பில்லை என்று விமானிகளிடம் தொடர்பில் இருந்தவர்கள் கூறுகின்றனர்.

தீவிரவாதிகள் இந்த விமானத்தைக் கடத்தியிருக்கவோ அல்லது மூழ்கடித்திருக்கவோ கூடும் என்ற கோணத்திலும் விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்தது ஏற்கனவே தெரிந்த விஷயம்தான். இதில் ஒரு பாஸ்போர்ட் இத்தாலியையும், இன்னொரு பாஸ்போர்ட் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்களுடையது ஆகும். இந்த பாஸ்போர்ட்டுகளில் பயணித்தவர்களுடைய விமான டிக்கெட், வியாழக்கிழமை தாய்லாந்தில் வாங்கப்பட்டிருக்கிறது. இதில் ஒரு டிக்கெட் பீஜிங் வழியாக ஜெர்மனியில் உள்ள ஃப்ராங்ஃபர்ட்-க்கும், இன்னொரு டிக்கெட் டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இரண்டு பாஸ்போர்ட்டுகளுடைய உண்மையான உரிமையாளர்கள் விமானத்தில் பயணிக்கவில்லை. இத்தாலியைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2012ஆம் ஆண்டிலும், ஆஸ்திரியாவைச் சேர்ந்தவருடைய பாஸ்போர்ட் 2013ஆம் ஆண்டிலும் தாய்லாந்தில் திருடப்பட்டுள்ளது. இந்த இருபாஸ்போர்ட்டுகளுமே இன்டர்போலின் டேட்டாபேஸில் இருக்கிறது. எப்படி போலி பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஒரு பன்னாட்டு விமானத்தில் ஏறமுடிந்தது என இன்டர்போல் கேள்வி எழுப்பியுள்ளது.

திருடப்பட்டுள்ள பாஸ்போர்ட்டில் பயணித்த ஒருவர் ஈரானைச் சேர்ந்த Pouria Nour Mohammad Mehrdad என்ற 19 வயது வாலிபர். இவருடைய தாயார் ஃப்ராங்க்ஃபர்ட் விமான நிலையத்தில் மகனுக்காக காத்திருந்திருக்கிறார். அவரிடம் விசாரித்ததை வைத்து இந்த ஈரானியர் எந்த தீவிரவாதக் குழுவையும் சேர்ந்தவர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும், புகலிடம் தேடித்தான் அவர் ஃப்ராங்க்ஃபர்ட்டுக்கு போலி பாஸ்போர்ட் மூலம் பயணித்தார் என்று சொல்லப்படுகிறது. இன்னொரு போலி பாஸ்போர்ட்டின் உண்மையான உரிமையாளர் Christian Kozel என்ற அவுஸ்திரேலியர் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டார். எனவே போலி பாஸ்போர்ட்டில் பயணித்த இருவரும் புகலிடம் தேடியே ஐரோப்பாவுக்கு பயணித்தது உறுதியாகியுள்ளது. மேலும், தீவிரவாதச் செயலுக்கான எந்தவிதமான தடயங்களும், ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை !

காணாமல் போன MH370 போயிங் 777-200 விமானத்தில் கடைசியாக ஃபிப்ரவரி 23ஆம் தேதி வழக்கமான பராமரிப்புப் பணிகள் செய்யப்பட்டிருக்கிறது. அப்போது விமானத்தில் எந்தவித கோளாறும் காணப்படவில்லை என்று மலேசியன் ஏர்லைன்ஸ் க்ரூப்பின் சி.இ.ஓ அஹமத் ஜௌஹரி யாயா தெரிவித்துள்ளார். கடந்த 2002ஆம் ஆண்டு மலேசியன் ஏர்லைன்ஸ் இந்த விமானத்தை வாங்கியுள்ளதாகவும், இதுவரை 53,465.மணி நேரங்கள் பறந்திருக்கிறதாகவும் அவர் கூறியுள்ளார்.

போயிங் 777-200 விமானம் சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பான விமானம் என தகவல்கள் கூறுகின்றன. கடைசியாக 2013ஆம் வருடம் சான் ஃப்ரான்சிஸ்கோவில் ஏசியானா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஓடுதளத்தின் அருகே விபத்துக்குள்ளாகி 3 பேர் இறந்தது மட்டுமே இதுவரை போயிங் 777 ரக விமானத்தில் ஏற்பட்ட பெரிய விபத்து ஆகும் !

இந்நிலையில், மலேசியாவைச் சேர்ந்த இருவர் வழக்கத்தைவிட வேறு ஒரு வழியில், வானத்தில் தாழ்வாகப் பறந்த விமானம் ஒன்றைப் பார்த்ததாகக் கூறியுள்ளனர்.

மலேசியாவின் கெடெரே (Ketereh) பகுதில் வசிக்கும் அலிஃப் ஃபாதி அப்துல் ஹதி என்ற ஒருவர் நள்ளிரவு 1.45 மணி அளவில் தன் வீட்டில் இருந்து விமானங்கள் மேலே எழும்பும்போதும், தரையிறங்கும்போதும் ஒளிரவிட்டு இருக்கும் பளீரென்ற வெளிச்சம் ஒன்றைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளார். அந்த வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாக உயரம் குறைந்து வந்ததாகவும், வழக்கத்தைவிட மாறுவழியில் 'பச்சோக்' என்ற கடலை ஒட்டிய பகுதியை நோக்கி அந்த வெளிச்சம் சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது எதுவும் தோன்றவில்லை எனவும், மாயமான விமானத்தைப் பற்றி கேள்விப்பட்டவுடன், போலீசிடம் இதைப் பற்றிக் கூற முடிவெடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

இவர் இருக்கும் பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் இருக்கும் குயாலா பேசுட் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஆசித் இப்ராகிம் என்ற 55 வயது மீனவர் ஒருவரும் இரவு 1.30 மணி அளவில் ஒரு தாழ்வாகப் பறந்த விமானத்தைப் பார்த்தாராம். வழக்கமாக விமான விளக்குகளின் வெளிச்சம் தொலைவில் உள்ள நட்சத்திரத்தைப் போலத்தான் இருக்கும். ஆனால், தான் பார்த்த வெளிச்சம் பளீரென்று இருந்ததாகவும், மேகங்களுக்குக் கீழ் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதுவரை விடை கிடைக்காத கேள்விகளாக பல உள்ளன.

1. விமானத்தில் பயணித்த சில பயணிகளின் செல்ஃபோன் ஒலித்தது குழப்பத்தை மேலும் அதிகரித்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் ஒரு பயணியின் QQ அக்கவுன்ட் (சீன சோஷியல் நெட்வொர்க்கிங் வலைதளம் ) திங்கள்கிழமை மதியம் வரை 'ஆக்டிவ்'-ல் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. விமானத்தில் இருந்த 19 சீனப் பயணிகளின் குடும்பங்கள் தாங்கள் விமானத்தில் பயணித்தவர்களுக்கு தொலைலைபேசியில் அழைத்ததாகவும், ரிங்-டோன் வந்தாலும், அழைப்பை யாரும் ஏற்கவில்லை எனவும் எழுதிக்கொடுத்திருக்கின்றனர்.

ஆனால், பீஜிங்கில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸின் பிரதிநிதி இக்னேஷியஸ் ஆங், தான் ஒரு பயணியின் தொலைபேசிக்கு ஐந்து முறை அழைத்தாகவும், ரிங்-டோன் கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

2. மலேசியாவின் கோட்டா பாரு பகுதியைத் தாண்டியதும் ஏன் விமானம் வழிமாறிச் சென்றது ?

3. விமானத்தில் கோளாறு என்றால் ஏன் விமானிகள் கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்கவில்லை ?

4. விமானம் பாதை மாறியதை ஏன் மலேசியன் ஏர்லைன்ஸுக்கும், கட்டுப்பாட்டு அறைக்கும் விமானிகள் தெரிவிக்கவில்லை ?

5. ஏன் விமானத்தில் இருந்து வரவேண்டிய அபாய சமிக்ஞை (Distress Signal) இதுவரை கிடைக்கவில்லை ?

6. கடலிலோ/தரையிலோ விழுந்திருந்தால் விமானத்தின் பிளாக்பாக்ஸ் தொடர்ந்து அனுப்பும் சமிக்ஞைகள் இதுவரை பெறப்படவில்லை.

7. எப்படி சில பயணிகளின் தொலைலைபேசிகள் திங்கள்கிழமை மதியம் வரை இயக்கத்தில் இருந்தது ? அதன்பின் எப்படி இயக்கம் நின்றது ?

என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

இதற்குமுன் இதேபோன்ற ஒரு சம்பவம் உலக வரலாற்றில் நடந்துள்ளது. 2009ஆம் வருடம் ஜூன் மாதம் ஏர் ஃப்ரான்ஸ் விமானம் ஒன்று ரியோ டி ஜெனிரோவில் இருந்து பாரிஸுக்குச் சென்றது. ஏர்பஸ் A300 ரக விமானமான இது கடலின் மேல் ரேடார்களின் கண்காணிப்புப் பகுதிக்கு அப்பால் பறக்கும்போது காணாமல்போனது. 6 மணிநேரங்களுக்குப் பிறகுதான் ஃப்ரான்ஸ் நாட்டினால் இந்த காணாமல் போன சம்பவத்தை ஏற்றுக்கொள்ளவே முடிந்தது. ஏர்பஸ் A300 ரக விமானமும் பாதுகாப்பான விமானம்தான். இந்த விமானமும் அபாய சமிக்ஞை (Distress Signal) அனுப்பவில்லை. 17,000 சதுர கி.மீ. பரப்பளவில் இந்த விமானத்திற்காக தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இந்த விமானத்தின் பாகங்கள் ஐந்து நாள்கள் கழித்து பிரேசிலுக்கும் ஆஃப்ரிக்காவுக்கும் நடுவில் இருக்கும் அட்லாண்டிக் கடலில் இருந்து எடுக்கப்பட்டது. ஆனால், இந்த விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் 2 வருடங்கள் கழித்து கடலுக்கு அடியில் அதிக ஆழத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மொத்தம் 3 வருடங்கள் கழித்துதான் அந்த விமானம் கடலில் விழுந்ததற்கான மர்மம் விலகியது!

மலேசியன் ஏர்லைன்ஸ் MH370 விமானத்தின் பிளாக்பாக்ஸும், காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டரும் கிடைக்கும் வரை இந்த கேள்விகளுக்கு விடை தெரிய வாய்ப்பில்லை !

இந்த தகவல்களில் சிலவற்றை நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளர் Matthew L. Wald அவர்களும் சிலவற்றை விகடன் செய்தியாசிரியர் ராஜா ராமமூர்த்தி அவர்களும் எழுதியிருந்தார்கள். அந்த செய்திகளின் தகவல்களை வைத்து இந்த செய்தி எழுதப்பட்டது. தகவல்களை தந்த இருவருக்கும் நன்றிகள்.

மூலச்செய்தி : The New York Times
By: Tm Ijlan.

மடிகே மிதியால ப்ரீமியர் லீக், இறுதிப் போட்டி சமநிலையில் முடிவு. (Photos)

Monday, December 9, 2013




கடந்த மூன்று நாட்களாக அதாவது 06,07,08/12/2013 மடிகே மிடியால ரெட் ரோஸ் அணியால் ஏற்பாடு செய்யப் பட்ட கிரிகட் சுற்றுப் போட்டியொன்று மடிகே மிடியால பொது விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெரும் அணிக்கு வழங்கப்படும் பரிசில்கலாவன முதல் இடத்தைப் பெரும் அணிக்கு வெற்றிக்கின்னமும், 40,000 ரூபா பணப்பரிசும், இரண்டாவது இடத்தைப் பெரும் அணிக்கு வெற்றிக்கின்னமும் 20,000 ரூபா பணப்பரிசும், மற்றும் சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த பந்து வீச்சாளர் ஆகியோருக்கும் வெற்றிக்கிண்ணம் வழங்கப் படுமென அறிவிக்கப் பட்டிருந்தது.


கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆரம்பமான இந்தப் போட்டியில் இருவதுக்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. ( RH )

இதில் இறுதியில் நேற்று மாலை அரை இறுதிப் போட்டியில்  பண்டார கொஸ்வத்த அணியும், பொதுஹெர ட்ரை ஸ்டார் அணியும் மோதியது, அதில் ட்ரை ஸ்டார் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அடுத்த அரை இறுதியில் மடிகே மிதியால ரெட் ரோஸ் அணியும், மடிகே மிதியால வயம்ப ரோயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தியது. அதில் ரெட் ரோஸ் அணி வெற்றி பெற்று பொதுஹெர ட்ரை ஸ்டார் அணியுடன் இறுதிப் போட்டியில் மோதுவதற்கு தகுதி பெற்றது.


இறுதியாக பலம் மிக்க அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி  சுமார் மாலை 5.45 மணியளவில் இடம் பெற்றது. நேரம் போதாமையின் காரணமாக ஓவருக்கு 4 பந்துகள் என மட்டுப் படுத்தப்பட்டு, 3 ஓவர்களைக் கொண்ட போட்டியாக இறுதிப் போட்டி சுருக்கமடைந்தது. இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பொதுஹெர ட்ரை ஸ்டார் அணி 3 ஓவர்கள் முடிவுக்கு (12 பந்துகள்) 27 ஓட்டங்களைப் பெற்றது.




பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மடிகே மிதியால ரெட் ரோஸ் அணிக்கு வெற்றி இலக்காக 28 ஓட்டங்கள் பெற வேண்டி இருந்தது. இருள் சூழ்ந்திரிந்தன் காரணமாக அந்த இலக்கு கஷ்டமாகத் தான் இருந்தது. இருந்தும் ரெட் ரோஸ் அணி போட்டியை சிரமத்துக்கு மத்தியில் சமநிலைப் படுத்தியது.



பின்னர் நேரம் பற்றாக்குறை காரணமாக வெற்றிக்கின்னத்துக்காக டொஸ் போடப்பட்டது, அதில் பொதுஹெர ட்ரை ஸ்டார் அணி வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது, இரண்டு பணப்பரிசில்களையும் சேர்த்து  இரு சம பங்குகளாகப் பிரிக்கப் பட்டு இரு அணிகளுக்கும் தலா 30,000 ரூபா பகிர்ந்தளிக்கப் பட்டது.




News & Photos by: RH

பாடசாலை மாணவர் கொலை விவகாரம் : மடிகே மிதியாலயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

Tuesday, December 3, 2013

பாடசாலை மாணவர் கொலை விவகாரம் : மடிகே மிதியாலயில் மக்கள் ஆர்ப்பாட்டம்

சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னாள் குருநாகல் மாவட்டம் வாரியபொலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மடிகே மிதியாலை எனும் கிராமத்தில் உள்ள மடிகே மிதியால மத்திய கல்லூரியில் 18 வயதான முஹம்மத் ரிபாத் யூசுப் என்ற மாணவனின் உடல் தூக்கில் தொங்கி, உயிரிழந்த நிலையில் ஊர் மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது.

இந்த நிகழ்வு ஒரு திட்டமிடப்பட்ட கொலையே என பாதிக்கப்பட்டவரின் குடும்பமும், ஊர் மக்களும் உரிய அதிகாரிகளிடம் கூறிய போதும், மரணப் பரிசோதகர் இது தற்கொலைதான் என ரேபோட் கொடுத்திருந்தார், மடிகே மிதியாலைக்கு பொறுப்பான வாரியபொல போலிஸ் தரப்பும் அதையே தனது முடிவாகவும் அறிவித்திருந்தது.

இருந்தும் பாதிக்கப்பட்டோரின் முயற்சியால் இந்த விடயம் மேலிடத்திற்கு அறியப்படுத்தப்பட்டு, பின்னர் இந்த மரண விசாரணையை குளியாப்பிட்டிய போலிஸ் பிரிவொன்ருக்கு ஒப்படைக்கப்பட்டது.

இதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலைதான் என உறுதியானதுடன், அதனுடன் சம்பந்தப் பட்ட நான்கு பேரை சென்ற 28 ஆம் 29 ஆம் திகதிகளில் அந்த போலிஸ் பிரிவு கைது செய்தது.

இந்த கொலைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று மடிகே மிதியாலையில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரியபொல போலிஸ் நேர்மையாக நடக்கவில்லை என்றும், இன்னும் இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப் படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோசம்களை எழுப்பினர்.


















Monday, November 25, 2013







ஜனாதிபதிக்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு தகவல் மற்றும்  தொடர்பாடல் தொழில்நுட்ப தலைமைத்துவ விருது வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற 2013 உலக உச்சி விருதின் அங்குரார்ப்பண நிகழ்விலேயே ஜனாதிபதிக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

சகல பிராந்தியங்களுக்கும் பிரநிதித்துவம் வகிக்கும் உலக உச்சி விருதின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களால் இந்த விருதிற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பிராந்தியம் மற்றும் உலகில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முன்னெடுப்புக்களுக்காகவே ஜனாதிபதி மஹிந்தவிற்கு இந்த விருத்து வழங்கப்பட்டுள்ளது.

அவரது தூரநோக்குள்ள தொழில்நுட்ப செயற்றிட்டங்கள், சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் அமுல்படுத்தப்படும் மக்கள் மைய செயற்பணிகள் என்பனவற்றுக்காவுமே இந்த விருது வழங்கப்பட்டது.

உலக உச்சி விருதானது தகவல் சமூகத்தைப் பற்றிய ஐக்கிய நாடுகளின் சபையின் உலகத்தரம் வாய்ந்த முன்னெடுப்புகளில் ஒன்றாகும்.

Sunday, November 24, 2013

අයවැයෙන් පෙට්‍රල්,ඩීසල් ගණන් උස්සයි

ජනාධිපති මහින්ද රාජපක්ෂ මහතා විසින් පසුගිය 21වනදා පාර්ලිමේන්තුවට ඉදිරිපත් කළ අයවැය යෝජනාවලියට අනුව පෙට්‍රල් සහ ඩීසල් සඳහා වූ බදුද ඉහළ දමා තිබේ.
ඒ අනුව පෙට්‍රල් ලීටරයක් සඳහා රුපියල් 27ක බද්දක්ද ඩීසල් ලීටරයක් සදහා රුපියල් 03ක බද්දක්ද පනවා ඇත.

Saturday, November 23, 2013

Published on Sunday, 24 November 2013 12:28
Daya jony 410px 24-11-13වයඹ පළාත් සභාව තුල මහ ඇමති දයාසිරි ජයසේකර මහතා විසින් සිදු කරමින් සිටින සේවාව අගය කරන බව අමාත්‍ය ජොන්ස්ටන් ප‍්‍රනාන්දු පවසයි.
පසුගිය පළාත් සභා මැතිවරණයේදී දයාසිරි ජයසේකර සහ ජොන්ස්ටන් ප‍්‍රනාන්දු දෙපාර්ශ්වයන් අතර විශාල ලෙස ගැටුම් ඇවිල ගිය අතර ඉන් පසුව ඔවුන් දෙදෙනා ප‍්‍රසිද්ධ වේදිකාවක එක්ව සිටීමට දක්නට ලැබුනේ මෑතකදීය.
නිකවැරටිය ප‍්‍රදේශයේ පැවති උත්සව සභාවක් අමතමින් ජොන්ස්ටන් ප‍්‍රනාන්දු ඇමතිවරයා වැඩිදුරටත් කියා සිටියේ, ඊළඟ ජනාධිපතිවරණයේදී දයාසිරි ජයසේකර මහ ඇමතිතුමන් සමඟ එකට එක් වී ජනාධිපති මහින්ද රාජපක්‍ෂ මහතාගේ ජයග‍්‍රහණය වෙනුවෙන් වැඩ කිරීමට සූදානම් බවයි.
උත්සවය සඳහා වයඹ මහ ඇමති දයාසිරි ජයසේකර මහතාද සහභාගී විය.


தொலைத்தொடர்பாடல் வரி அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான வரி வரவு செலவுத்திட்டல் அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் தற்போது 20 வீதமாக காணப்படும் தொலைத்தொடர்பாடல் வரி, 25 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 
 
ஆனாலும் இணையப் பாவனைக்கான வரி தொடர்ந்தும் 10 வீதமாகவே பேணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதுபோலவே, கோதுமை மா, சீஸ், தயிர், மாஜரின், சோஸ் வகைகள், செசேஜ் வகை, இனிப்பு வகைகள், சொக்லேட்கள், சீரியல் வகைகள், பஸ்டா, மோல்ட் மூலம் தயாரிக்கப்பட்ட பியர், வினாகிரி, மரக்கறி, காளான், கடலை மற்றும் பழங்கள், பழரசம், நுளம்புச் சுருள், வெட்டப்பட்ட மலர்கள் மீதான செஸ் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அது குறித்த விபரங்கள்  வழங்கப்படவில்லை.






சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது

இந்தியாவின் அதியுயர்ந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருது வழங்கி சச்சின் டெண்டுல்கர் கௌரவிக்கப்பட்டுள்ளார். சர்வதேசப் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெற்ற நிலையிலேயே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
 
24 வருடங்கள் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) நிறைவுபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான போட்டியுடன் சர்வதேசப் போட்டிகளிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்றார்.
 
இதன் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்ட இந்தியாவின் பிரதமர் அலுவலகம், சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக அறிவித்தது.
 
சந்தேகமில்லாமல் சச்சின் டெண்டுல்கர் மிகச்சிறப்பான கிரிக்கெட் வீரர் எனக் குறிப்பிட்ட பிரதமர் அலுவலகம், உலகம் முழுவதுமுள்ள மில்லியன் கணக்கானவர்களை அவர் உத்வேகப்படுத்தியுள்ளதாகவும், அவர் ஒரு வாழும் ஜாம்பவனான் எனவும் தெரிவித்தது.
 
16 வயதில் தனது அறிமுகத்தை மேற்கொண்டதிலிருந்து கடந்த 24 வருடங்களில் அவர் உலகம் முழுதும் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியுள்ளதாகவும், இந்தியாவிற்காக ஏராளமான போட்டிகளை வென்றுள்ளதாகவும் தெரிவித்த பிரதமர் அலுவலகம், உலகில் இந்தியாவின் விளையாட்டுக்களுக்கான சிறப்பான தூதுவராக அவர் செயற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
 
சச்சின் டெண்டுல்கரால் ஏற்படுத்தப்பட்டுள்ள சாதனைகள் ஒப்பிட முடியாதன எனக் குறிப்பிட்டுள்ள பிரதமர் அலுவலகம், விளையாட்டில் அவரது சிறப்பான நடவடிக்கைகளுக்காக அவருக்கு ஏராளமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 
பாரத ரத்னா விருதைப் பெறும் முதலாவது விளையாட்டு வீரராகவும், இளையவராகவும் சச்சின் டெண்டுல்கர் மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Views: 501
 0 0 0 

தங்க இறக்குமதி தீர்வை குறைப்பு

Published on Sat Nov - 2013 48 Views
imagesதங்கத்துக்கான இறக்குமதி தீர்வை குறைக்கப்பட்டுள்ளது. 10 சதவீதமாகக் காணப்பட்ட தங்கத்துக்கான இறக்குமதி தீர்வை 7.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தனது வரவு – செலவுத் திட்டத்தில் தங்கத்தின் இறக்குமதி தீர்வை மீது விதிக்கப்பட்டிருந்த 100 சதவீத மேலதிக அறவீடு அகற்றப்படும் என அறிவித்தார்.
தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி கண்டதை தொடர்ந்து தங்கம் மீதான 10 சதவீத இறக்குமதி தீர்வை மீது 100 சதவீத மேலதிக அறவீடு விதிக்கப்பட்டது.
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.