Midiyala Hot News

Blogger news

M.A Rahman Hamad Hospital....

Saturday, February 9, 2013

Madige Midiyala C.C  Principal M.A Rahman (Naleemi) Hamad  Hospitalil  Noyvaaipattu Sihitchai Petru Varuhiraar Annar Poorana Suham Pera ALLAH vidam Tholudu Pirarthanai Saivom.

கமல் வர வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரியதால் பேச்சு ஒத்திவைப்பு!

Tuesday, February 5, 2013

 
 
விஸ்வரூபம் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்குவது தொடர்பான முதல்கட்ட சந்திப்பு முடிந்துவிட்டது. மாலை 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கமல்ஹாசன் இல்லாமல் காட்சிகளை வெட்டுவது சாத்தியமாகாது என்று இஸ்லாமிய அமைப்புகள் கூறி விட்டன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இஸ்லாமிய சமூகத்தின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கமல்ஹாஸனின் விஸ்வரூபத்தில் பல காட்சிகள் இருப்பதாகக் கூறப்பட்டதால், படத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஐந்து தினங்களாக இந்தப் படம் தொடர்பான சர்ச்சை உச்சபட்ச பிரச்சினையாக மீடியாவில் வலம் வந்து கொண்டுள்ளது.

இந்த நிலையில் படத்தில் உள்ள ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க கமலுக்கு சம்மதமென்றால் படத்தை வெளியிட அரசு உதவும் என முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதைத் தொடர்ந்து இஸ்லாமிய அமைப்புகளுடன் சமாதானம் பேச ஆரம்பித்துள்ளனர்.

கமல் சார்பில் அவரது அண்ணன் சந்திரஹாஸனும், இயக்குநர் அமீரும் இஸ்லாமிய அமைப்புகளுடன் முதல்கட்ட பேச்சுகள் நடத்திவிட்டனர். மாலையில் நட்சத்திர ஹோட்டலில் முத்தரப்பு பேச்சுவார்த்தையின் 2வது கட்டப் பேச்சு நடப்பதாக இருந்தது.

இதில் 24 இஸ்லாமிய அமைப்புகளின் தலைவர்கள், கமலின் அண்ணன் சந்திரஹாஸன், அமீர் மற்றும் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலர், அரசு வழக்கறிஞர் உள்ளிட்டோர் பங்கேற்பதாக இருந்தது.

முதல் கட்டப் பேச்சுவார்த்தையின்போது, விஸ்வரூபத்திலிருந்து 30 நிமிடக் காடசிகளை நீக்க இஸ்லாமிய அமைப்புகள் கோரியிருந்தனர். இதுகுறித்து சந்திரஹாசன், கமல்ஹாசனிடம் தெரிவித்ததாக தெரிகிறது. அதற்கு கமல் ஹாசன் நான் வந்து பார்த்த பிறகு காட்சிகளை வெட்டுவது குறித்து முடிவு செய்யலாம் என்றார். தற்போது கமல்ஹாசன் மும்பையில் உள்ளார். நாளைதான் அவர் சென்னை திரும்புகிறார்.

கமல்ஹாசன் இல்லாமல் பேச்சுவார்த்தையை தொடருவது சரியாக இருக்காது என்று இஸ்லாமிய அமைப்புகளும் கருத்து தெரிவித்தன. இதையடுத்து பேச்சுவார்த்தை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உள்துறைச் செயலர் சந்திப்பு இதனிடையே கமலின் அண்ணன்

முன்னதாக சந்திரஹாஸனை இன்று தமிழக உள்துறைச் செயலர் சந்தித்துப் பேசினார். ஆட்சேபத்துக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டதற்கு சம்மதம் தெரிவித்தார் சந்திரஹாஸன்.

www.doenets.lk/exam

Tuesday, January 29, 2013

RESULTS: GCE(A/L)-2012 Exam Results Paarvai ida>>>>

http://www.doenets.lk/exam/

குருநாகலில் முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மூடல்

Friday, January 25, 2013




நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தின நிகழ்வை முன்னிட்டு இன்று குருநாகல் மற்றும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் குருநகால் நகரை அண்மித்த பிரதேசங்களிலான தெலியா கொன்ன, மல்லவப்பிட்டிய ஆகிய பகுதிகளில் முஸ்லிம் வியாபார நிலையங்கள்  மூடப்பட்டிருந்தது.
அண்மைக்காலமாக முஸ்லிம்களின் மீது தொடுக்கப்பட்டு வரும் இனவாத அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம்களின் ஒற்றுமை இன்றியமையாத ஒரு சேவையாக கருதப்படும் இந்தச் சந்தப்பத்தில் குருநாகல் பசார் ஜும்ஆப் பள்ளிவாசல் நிர்வாக சபை மற்றும் தெலியாகொன்ன, மல்லவப்பிட்டிய பள்ளிவாசல்களின் நிர்வாக சபைகளும் குருநாகல் முஸ்லிம் இளைஞர் அமைப்பும் குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் ஸ்ரீ. சு. கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான அப்துல் சத்தார் ஆகியோர் இணைந்து இதற்கான வேண்டுதலை விடுத்திருந்தனர்.
முஸ்லிம்களின் இந்த நிகழ்வுக்கு ஆதராவாக சில சிங்கள தமிழ் இனத்தைச் சார்ந்தவர்களின் கடைகளும் இன்று மூடுப்பட்டு இருந்தன. எனினும் முஸ்லிம் நிறுவனங்களான நோலிமிட் பெசன்பக். ஹமீடியா போன்ற வர்த்தக நிலையங்கள் மூடப்படாமை இருந்தது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடியில் பாம்பு மழை (படம் இணைப்பு)

Posted on 25/01/2013
DSC01916tm-
காத்தான்குடியின் சில பகுதிகளில் இன்று (25.1.2013) காலை பாம்பு மழை பெய்துள்ளதாக பிரதேச வாசிகள் காத்தான்குடி இன்போவிற்கு தெரிவித்தனர்.
காத்தான்குடி 6ம் குறிச்சி அமானுல்லா வீதி மற்றும் காத்தான்குடி ஜன்னத் மாவத்தை ஆகிய பகுதிகளிலேயே இந்த பாம்புமழை பெய்துள்ளது.
காத்தான்குடி அமானுல்லா வீதியிலுள்ள ஒரு வீட்டிலும் ஜன்னத் மாவத்தையிலுள்ள ஒரு வீட்டிலுமே இந்த பாம்பு மழை பெய்துள்ளது.
ஜன்னத் மாவத்தையில் வசிக்கும் பெண்மனியொருவர் தனது வீட்டின் வளாகத்தில் நின்று கொண்டிருந்த போது மழையுடன் சேர்ந்தாற்போல் பாம்புகள் இரண்டு வந்து விழுந்ததாகவும் அதில் ஒன்று தனது தோல் பட்டையில் விழுந்து ஓடியதாகவும் தெரிவித்தார்.
இந்த பாம்புகள் எந்த இனத்தை சேர்ந்த பாம்புகள் என்பது பற்றி தங்களுக்கு தெரியாது எனவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.
DSC01917 DSC01916 DSC01915 DSC01914 DSC01913 DSC01912 DSC01911

www.midiyalanews.blogspot.com

Wednesday, January 23, 2013


,d;W Kjy; cq;fs; ghu;itf;F..
https://twitter.com/MidiyalaHot
http://www.facebook.com/midiyala.hotnews

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கும் அதிகாரத்தை பொலிஸாருக்கு வழங்கும் சட்டமூலம்

Tuesday, January 22, 2013


TM.பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் 24 மணித்தியாலங்கள் மட்டுமே தடுத்து வைத்து விசாரிக்கலாம் என்றிருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுடனேயே குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் சமர்ப்பிக்கப்படவிருக்கின்றது.

இந்த சட்டமூலத்தின் 8 ஆம் வாசகமானது அரசியலமைப்புக்கு அமைவாக இல்லையெனவும் இதனால் இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலத்தை விசேட பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிடியாணையின்றி பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஒருவரை 48 மணித்தியாலங்கள் தடுத்துவைப்பதற்காக 15 வகையான தவறுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன...

1.    கொலை.
2.    கொலையாகாத குற்றமுடைய மரணம் (கைமோச கொலை).
3.    கொலை முயற்சி.
4.    கொலை புரிவதற்காக ஆட்கவர்தல் அல்லது ஆட்கடத்தல்.
5.    தவறாக அடைத்துவைக்கும் நோக்கில் ஆளொருவரை ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
6.    கடுங்காயத்திற்கு உட்படுத்தும் உளக்கருத்துடன் (நோக்கத்துடன்) ஆட்கடத்தல் அல்லது ஆட்கவர்தல்.
7.    ஆளொருவரை மறைத்துவைத்தல் அல்லது அடைத்துவைத்தல்.
8.    கற்பழிப்பு.
9.    மரணத்தை ஏற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு புரியப்படும் திருட்டு.
10.  மரணம் அல்லது கடுங்காயம் விளைவிக்கும் வகையில் கொள்ளை.
11.  மரணம் விளைவிக்கக்கூடிய ஆயுதந்தாங்கிய படுகொலை.
12.  மேற்கூறப்பட்ட எவையேனும் தவறுகளுக்கு புரியும் முயற்சி.
13.  வெடிப்பொருட்களை, தீங்குவிளைவிக்கும் ஆயுதம் ஒன்றை அல்லது துவக்கு ஒன்றைப் பயன்படுத்தி        புரியப்படும் தவறு.
14.  மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையாக செயற்படல்.
15.  மேற்கூறப்பட்ட தவறொன்றுக்கு உடந்தையளிப்பதற்கு அல்லது தவறைப்புரிவதற்கு சூழ்ச்சி செய்தல்.

இந்த குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 11 ஆம் திகதி நீதியமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
MidiyalaHot & Team

ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த 10 லட்சம் ரூபா நன்கொடை



ரிசானா குடும்பத்திற்கு ஜனாதிபதி மஹிந்த 10 லட்சம் ரூபா நன்கொடை சவுதி அரேபியாவில் சிரச்சேதம் செய்யப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மூதுரைச் சேர்ந்த இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் குடும்பத்தாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 10 லட்சம் ரூபாவை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
இதற்கான நிகழ்வு இன்று (22) அலரி மாளிகையில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

Midiyala Hot News Present

Monday, January 21, 2013

Anbulla Vaadikkaiyalarkalukku, MidiyalaHot Ungalukkena Thaniyana Puthiya Parimanathudan January 24 Thihathi Muthal Ethirparungal.......

குண்டுத் தாக்குதலில் 12 ஷியா முஸ்லிம்கள் பலி

Sunday, January 20, 2013

 குண்டுத் தாக்குதலில் 12 ஷியா முஸ்லிம்கள் பலி:   ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 ஷியா முஸ்லிம்கள் பலியாகியுள்ளனர். பாக்தாத்தில் உள்ள சமரா என்ற புனித...
 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.