Sep 03 Madige Midiyalayil Nadaipetra Pothujana Munnaniyin Maaperum Koottam Mr.Namal Rajapakse MP Kalandu Sirappiththar.
Tuesday, September 3, 2013
15 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி சாதனை படைத்த 8 வயது சிறுமி!
Thursday, August 22, 2013
கோவை மாவட்டத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் 15 நிமிடத்தில் மடிக்கணினியை கழற்றி மாட்டி சாதனை படைத்துள்ளார்.
கோவை சாய்பாபா காலனியை சேர்ந்த பிரபு மகாலிங்கம் என்பவர் கணினி சேல்ஸ் அண்ட் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவரது மகள் ஆதர்ஷினி(8) இவர் கோவில்பாளையம் அருகே உள்ள தேவம்பாளையம் இந்தியன் பப்ளிக் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறாள்.
கோடை விடுமுறையில் அப்பாவின் கடைக்கு சென்றிருந்த ஆதர்ஷினி கணினியை பிரித்து அப்பா சர்வீஸ் செய்வதை உன்னிப்பாக பார்த்தாள். மகளின் ஆர்வத்தை கவனித்த பிரபுமகாலிங்கம் அவருக்கு தொடர்ந்து 15 நாட்கள் கணினியை கழற்றி மாற்றுவது குறித்து பயிற்சி அளித்தார்.
அதன் பின்பு கடையில் இருந்த மடிக்கணினியை சிறுமி தானே கழற்றி மாட்டி அசத்தினாள். மாணவியின் திறமையை கண்டு பள்ளி ஆசிரியர்களும் பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
இந்நிலையில் அரியானா இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனத்துக்கு ஆதர்ஷினி பெயரை பள்ளி நிர்வாகம் பரிந்துரை செய்தது. இதனைத் தொடர்ந்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவன பொறுப்பாளர் விவேக்ராஜா, சிறுமியின் தாத்தாவும் முன்னாள் துணை மாவட்ட ஆட்சியருமான மகாலிங்கம் ,பள்ளி சேர்மன் அசோக், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் பள்ளி வளாகத்தில் 18.47 நிமிடத்தில் ஒரு மடிக்கணினியை கழற்றி மாற்றினாள் ஆதர்ஷினி.
அதைவிட குறைவான நேரத்தில் சிறுமியால் இதனை செய்ய முடியும் என்ற அவளது தன்னம்பிக்கையை பாராட்டி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தது சாதனை நிறுவனம். இதனை தொடர்ந்து 15.23 நிமிடத்தில் மடிக்கணியை கழற்றி மாட்டி சாதனை படைத்ததன் மூலம் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் ஆதர்ஷினி இடம் பிடித்தாள்.
இது குறித்து சிறுமி கூறுகையில், கணினியை அப்பா சர்வீஸ் செய்வதை பார்த்து எனக்குள் ஆர்வம் ஏற்பட்டது. 15 நாட்கள் இடைவிடாது முயற்சி செய்து அதன் நுட்பத்தை தெரிந்து கொண்டு இந்த சாதனையை படைத்துள்ளேன்.
தற்போது செய்த சாதனையை காட்டிலும் மிக குறைவான நேரத்தில் செய்து மற்றொரு சாதனை படைப்பேன் என கூறினார்.
பருக்கள் மறைய சிலஎளிய குறிப்புகள்!
Tuesday, August 20, 2013
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. ஆனால் அந்த முகத்தில் ஏற்படும் பருக்கள் அனைத்து அழகையும் கெடுத்து விடுகிறது. ஆண்கள் மற்றும் பெண்கள் பெரிதும் அவஸ்தைப்படும் சரும பிரச்சினைகளில் ஒன்று தான் இந்த முகப்பரு.
அதிலும் பருவ வயதை எட்டிய இளம் வயதினருக்கு ஏற்படும் இந்த பருக்களானது அவர்களின் தன்னம்பிக்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது. இத்தகைய முகப்பருக்களானது முகத்தின் அழகைக் கெடுக்கும் வண்ணம் வரக்கூடியது.
இந்த முகப்பரு தாடைகளில் வந்தால், மேக்கப் கொண்டு மறைக்க முயற்சிப்போம். இருப்பினும், அந்த முகப்பருக்களானது மேக்கப் பொருட்களில் உள்ள கெமிக்கல்களால் உடைந்து, முகம் முழுவதும் பரவி பெரும் தொல்லையைக் கொடுக்கும்.
அதிலும் இந்த பருக்கள் முகங்களில் மட்டுமின்றி, உடலில் மார்பகம், முதுகு மற்றும் உட்காரும் இடங்களிலும் வரும். முகப்பருக்கள் எதனால் வருகிறது? தூசிகள், பாக்டீரியா மற்றும் இறந்த செல்களின் கலவையானது, சரும எண்ணெய் சுரப்பிகளில் தங்கி புரப்பியோனி பாக்டீரியாவை வளர்ச்சி அடையச் செய்து, பருக்களாக வெளிப்படுகின்றன.
அதுமட்டுமின்றி, வேறு சில சரும பிரச்சினைகளையும் உண்டாக்கி விடுகின்றன. மேலும் பி.சி.ஓ.எஸ்., கர்ப்பம் மற்றும் எண்ணெய்ப் பசை சருமம் கூட முகப்பருக்களை உண்டாக்கும். இத்தகைய பருக்கள் தாடைகளில் வந்தால், அவை முகத்தின் அழகையே பாழாக்கி விடும்.
அதேப் போன்று இவற்றைப் போக்குவதும் மிகவும் கடினம். உடல் சூட்டினால் பருக்கள் ஏற்படுவதாகவும், எண்ணை பயன்பாடு அதிகம் இருப்பதால் பருக்கள் உருவாவதாகவும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகிறது.
சிலருக்கு குறிப்பிட்ட கால இடை வெளியில் இந்த பருக்கள் மறைந்து விடுகிறது. சிலருக்கோ முகத்தின் அழகை சீர்குலைப்பது போல் குழிகள் உண்டாகி அவலட்சணத்தை ஏற்படுத்தி விடுகிறது. இருப் பினும், ஒருசில இயற்கைப் பொருட்கள் மற்றும் செயல்கள் மூலம் தாடைகளில் வரும் பருக்களை போக்க முடியும்.
அதிலும் நம்பிக்கையுடன் மேற்கொண்டால், முடியாதது எதுவும் இல்லை. சரி, இப்போது தாடைகளில் ஏற்படும் பருக்களை போக்கும் சில இயற்கை சிகிச்சைகளைப் பார்ப்போம்.
ஆவிப் பிடித்தல்: சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளைப் போக்க ஆவிப் பிடிக்க வேண்டும். ஏனெனில் ஆவிப்பிடித்தால், சருமத் துளைகள் திறந்து, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை தளர்ந்துவிடும். இதனால் ஆவிப்பிடித்தப் பின் காட்டன் கொண்டு, முகத்தை துடைத்தால், பருக்களை உண்டாக்கும் மாசுக்கள் மற்றும் இறந்த செல்கள் முற்றிலும் வெளிவந்துவிடும்
கிராம்பு: கிராம்பும் பருக்களை போக்கக்கூடிய பொருட்களில் ஒன்றாகும். அதற்கு கிராம்பை நீரில் போட்டு கொதிக்கவிட்டு, குளிர வைத்து, பின் அதனை அரைத்து, பருக்கள் உள்ள இடங்களில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
முகத்தை கழுவவும்: அடிக்கடி முகத்தை கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் படியும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள், எண்ணெய் சுரப்பிகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்களில் கலந்து, முகப்பரு மற்றும் பிம்பிளை உருவாக்குவதில் இருந்து தடுக்கலாம்.
சந்தனப் பொடி: சந்தனப் பொடியுடன், தயிர், கடலை மாவை மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஊற வைத்து கழுவினால், பருக்கள் நீங்குவதோடு, முகமும் பொலிவோடு காணப்படும்.
தேன்: தேனைக் கொண்டு பருக்கள் உள்ள இடங்களில் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் ஊற வைத்து, பால் கொண்டு முதலில் கழுவி, பின் நீரில் அலசினால், சரும வறட்சியை தவிர்ப்பதோடு, பருக்களையும் போக்கலாம். யாரையும் எளிதில் எதிர் கொண்டு பேசுவதற்கு கூட கூச்சத்தை ஏற்படுத்தும்.
இந்த பருக்களை மேற்கூறப்பட்டுள்ள செலவு குறைந்த மருத்துவ குறிப்புக்களை கையாண்டு பருக்கள் இல்லாத முகத்தை, நாமும் கொண்டு வருவோம்.
பள்ளிவாசல்கள் முஸ்லிம்களை நேர்வழிப்படுத்தவே : கித்துல்பே தேரர்!
பள்ளிவாசல்கள் நிர்மாணிக்கப்படுவது என்பது முஸ்லிம் மக்களை நேர்வழிப்படுத்துவதற்காகும். இதனை அறியாத சிலர் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் இனப்பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிகள் செய்கின்றனர் என்று குருநாகல் எபஸ்கிகோ பௌத்த நிலையத்தின் தலைவர் கித்துல்பே ஆரியதம்ம தேரர் தெரிவித்தார்.
குருநாகல் குளத்து வீதியில் வாமி நிறுவனத்தினால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அல் மஸ்ஜிதுல் ரஹ்மா பள்ளிவாசல் திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட கித்துல்பே ஆரியதம்ம தேரர் அங்கு இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந் பேசுகையில் இந்தப் பள்ளிவாசல் திறப்பு விழாவில் கலந்து கொள்ளுவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இது போன்ற பள்ளிவாசல்கள் இலங்கையில் எல்லா இடங்களிலும் திறக்கப்பட வேண்டும். எந்தவொரு மார்க்கமும் நல்ல அம்சங்களையே போதிக்கின்றன. குறுகிய காலத்திற்கு இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்பட்டமையிட்டு நான் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். இந்த பள்ளிவாசல் இந்தப் பகுதியிலுள்ள இளைஞர்களை நேரான வழிக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வாமி நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உமர் இத்திரீஸ், குருநாகல் மாவட்ட ஸ்ரீ. சு. கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
முஸ்லிம் தரப்பும் நவநீதம் பிள்ளையை சந்திக்கிறது!
இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் சந்திக்கவுள்ளது. இதனை குறித்த குழுவில் இடம்பெற்றுள்ள அந்த குழுவின் தலைவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
பயங்கரவாத புலிகளும், பௌத்தசிங்கள இனவாதிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறில்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு ஆதாரங்களுடன் எடுத்துக்கூறப்படவுள்ளன.
பயங்கரவாத புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த போர்க் குற்றங்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்களை பயங்கரவாத புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தமை, கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லலிம்களை சுட்டுக்கொன்றமை உள்ளிட்ட புலிகள் செய்த கொடுரங்கள் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது ஆதாரங்களுடன் முன்வைக்கப்படவுள்ளன.
அத்துடன் அண்மைக்காலமாக பௌத்தசிங்கள இனவாத கடும்போக்கு அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின் போது எடுத்துக்கூறப்படவிருப்பதாகவும் அந்த முஸ்லிம் பிரமுகர் மேலும் கூறினார்.
உலகை கலக்க வருகிறது ஸ்மார்ட் கைக்கடிகாரம் !
ஸ்மார்ட் கைப்பேசி, டேப்லட் உற்பத்திக்கு அடுத்தபடியாக ஸ்மார்ட் கைக்கடிகார உற்பத்தியில் கால் பதித்துள்ள Samsung நிறுவனம் Galaxy Gear எனும் ஸ்மார்ட் கைக்கடிகாரத்தினை வடிவமைத்து வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4ம் திகதி அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படும் இக்கைக் கடிகாரம் தொடர்பான சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி 1.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Processor, 1GB RAM ஆகியவற்றினைக் கொண்டுள்ளது. இவை தவிர 1.67 அங்குல அளவு, 320 x 320 Pixel Resolution உடைய தொடுதிரை, 2 மெகாபிக்சல்கள் உடைய கமெரா போன்றவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. எனினும் இதன் விலை தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
SAMSUNG மொபைல் போன்களுக்கான குறியீட்டுகளே....
Friday, August 16, 2013
1)*#9999# - தங்கள் போனின் சாப்ட்வேர் சார்ந்த தகவல்களை அறிய.
2)#*3849# -தங்கள் சாம்சங் மொபைல் போனை மீண்டும்Rebootசெய்ய.
3)*#06# -சாம்சங் போனின்IMEI (EMI)எண்ணை அறிய. இது மிக முக்கிய ஓர் எண்ணாகும்.
4)#*2558# -தங்கள் போனின் கடிகாரத்தை இயக்க அல்லது நிறுத்த. தங்கள் போனின் மொபைல் போனின் டைமை ஆன் செய்ய அல்லது ஆப் செய்ய.
5)#*7337# -தங்கள் அண்மைகால சாம்சங் மொபைல் போனை அன்லாக் செய்ய(UnLock).
6)#*4760# -தங்களில் போனில்GSM Featuresயை இயக்க அல்லது நிறுத்த.
7)*#9998*246# -தங்கள் போனின் மெமரி திறன் மற்றும் பேட்டரியின் திறனை அறிய.
8)*#7465625# -தங்கள் போனின் கடவுசொல் நிலைமை அறிய.
9)*#0001# -தங்கள் போனின் சீரியல் எண்ணை காண.
10)*#2767*637# -தங்கள் மொபைல் போனை அன்லாக் செய்ய.
11)*#8999*636# -தங்கள் போனின் சேமிப்பு கொள்ளலவு நிலைமையை காண.
12)*#8999*778# -தங்கள் சிம் கார்ட் பற்றிய தகவல்களை அறிய.
13)#*#8377466# -தங்கள்போனின் ஹாட்வேரின் தன்மை மற்றும்Versionயை அறிய.
14)#*3888# -சாம்சங் போன்களின்Bluetoothயின்தகவல்களை
15)#*5376# - ஒரே கட்டளையில் தங்கள் போனின் அனைத்து மெசேஜ்யும் ஒரே கட்டளையில் நீக்க அல்லது அழிக்க.
16)#*2472# -தங்கள் போனின் சார்ஜிங் நிலைமை அறிய.
ஒரு சில கோடுகள் சில போன்களில் இயங்காது.
Midiyala Pazaiku Carpet Ida Pazayai Alapazatku Abdul Saththar
Thursday, August 15, 2013
Msg1st 2nd Year Anniversary To Day...
Monday, August 12, 2013
Grandpass Molawattha Palli Thakkuthalil Nadanththu Enna?
Saturday, August 10, 2013
Grandpass Molawattha Palli Thakkuthalil Nadanththu Enna? Mulu Viparngkal Adangkiya Video Vai Parkka >>>
http://www.dailymotion.com/video/x12xkra_%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-sltj_news
http://www.dailymotion.com/video/x12xkra_%E0%AE%AE-%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%B3-%E0%AE%B3-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%B2-sltj_news
Subscribe to:
Posts (Atom)