Midiyala Hot News

Blogger news

முஸ்லிம் தரப்பும் நவநீதம் பிள்ளையை சந்திக்கிறது!

Tuesday, August 20, 2013

இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளையை முஸ்லிம் பிரதிநிதிகள் அடங்கிய குழுவொன்றும் சந்திக்கவுள்ளது. இதனை குறித்த குழுவில் இடம்பெற்றுள்ள அந்த குழுவின் தலைவர் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தெரிவித்தார்.
பயங்கரவாத புலிகளும், பௌத்தசிங்கள இனவாதிகளும் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொண்ட மனித உரிமை மீறில்கள் குறித்து இலங்கை முஸ்லிம்களின் சார்பில் நவநீதம் பிள்ளைக்கு ஆதாரங்களுடன் எடுத்துக்கூறப்படவுள்ளன.
பயங்கரவாத புலிகள் முஸ்லிம்களுக்கு இழைத்த போர்க் குற்றங்கள், வடக்கிலிருந்து முஸ்லிம்களை பயங்கரவாத புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்தமை, கிழக்கு மாகாணத்தில் தொழுது கொண்டிருந்த முஸ்லலிம்களை சுட்டுக்கொன்றமை உள்ளிட்ட புலிகள் செய்த கொடுரங்கள் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின்போது ஆதாரங்களுடன் முன்வைக்கப்படவுள்ளன.
அத்துடன் அண்மைக்காலமாக பௌத்தசிங்கள இனவாத கடும்போக்கு அமைப்புக்கள் பள்ளிவாசல்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்கள், முஸ்லிம்களின் மதச் சுதந்திரத்திற்கு விடப்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் குறித்தும் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின் போது எடுத்துக்கூறப்படவிருப்பதாகவும் அந்த முஸ்லிம் பிரமுகர் மேலும் கூறினார்.

No comments:

 

Follow On Facebook

F (Space) Msg1st Sent To 40404

Midiyala Background

Most Reading

Tags

Midiyala Hot News Presentetion. Powered by Blogger.